பெர்த்தின் தெற்கில் உள்ள பல புறநகர்ப் பகுதிகளில் ஒரு பெரிய கழிவுநீர்க் கசிவைத் தொடர்ந்து சுத்தம் செய்யும் பணி தொடங்கியுள்ளது .
ஸ்பியர்வுட்டில் முதல் குழாய் வெடித்து ஐந்து நாட்கள் ஆகின்றன. இன்னும் சரிசெய்யப்படாததால் குடியிருப்பாளர்கள் கழிவுகளுக்கு மத்தியில் வசிக்கின்றனர்.
வெள்ளிக்கிழமை ஹாமில்டன் சாலையில் ஒரு குழாய் வெடித்ததில் ஒரு குளம் ஒரு கழிவுநீர் குட்டையாக மாறியதை அடுத்து, ஸ்பியர்வுட்டின் வாட்சோனியா பூங்காவில் சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறன.
துர்நாற்றம் தாங்க முடியாமல் மிகவும் மோசமாக இருப்பதுடன், வெளியே கூட கால் வைக்க முடியாத நிலை உள்ளதாக அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் ஊடங்களுக்கு தெரிவித்தனர்.
எனினும் சுத்தம் செய்யும் பணிகள் துரிதமாக நடைபெறுவதாக நீர் வழங்கல் கழகம் கூறுகிறது.