ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு முதியோர் பராமரிப்பு மற்றும் ஊனமுற்றோர் ஆதரவு சேவையான Annecto, ஜூலை மாதம் முதல் மூடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், நிதி சிக்கல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினர்.
2024 ஆண்டு அறிக்கையின்படி, இது 1,000க்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தி சுமார் 4,400 வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்தது.
தனது வாடிக்கையாளர்களை மற்ற வழங்குநர்களுக்கு மாற்றுவதற்கு மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக தொண்டு நிறுவனம் கூறுகிறது.
இந்த தொண்டு நிறுவனம் விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து மற்றும் ACT ஆகிய மாநிலங்களில் 19 இடங்களில் செயல்படுகிறது.
இது மெல்பேர்ண், சிட்னி, கான்பெரா, மில்டுரா, பல்லாரத், பச்சஸ் மார்ஷ், மார்னிங்டன், டப்போ மற்றும் கெம்ப்சி ஆகிய இடங்களிலும் கிளைகளைக் கொண்டுள்ளது.
மேலும், அந்த நிறுவனம், தனது வாடிக்கையாளர்களை மற்ற வழங்குநர்களுக்கு மாற்றுவதற்காக, சுகாதாரம், ஊனமுற்றோர் மற்றும் முதுமைத் துறை, தேசிய ஊனமுற்றோர் காப்பீட்டு நிறுவனம் மற்றும் படைவீரர் விவகாரத் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறியது.
அதன் 2024 அறிக்கையின்படி, இந்த தொண்டு நிறுவனத்தில் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்களும் 4,400 வாடிக்கையாளர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.