நேற்று காலை கோல்ட் கோஸ்ட்டில் மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு சுறா வலையிலிருந்து ஒரு திமிங்கலம் விடுவிக்கப்பட்டது .
Coolangattaவில் உள்ள Greenmount கடற்கரையில் திமிங்கலம் வலையில் சிக்கியது. அது தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள முயன்றது. ஆனால் அந்த வலையின் ஒரு பகுதி அதன் உடலில் சிக்கிக் கொண்டு நீந்திக் கொண்டிருந்தது.
Seaworld மீட்புக் குழுவினர் மீட்புப் பணியைத் தொடங்கினர். நேற்று காலை 8.30 மணியளவில் அவர்கள் திமிங்கலத்தை வலையிலிருந்து மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரத்திற்குள், திமிங்கலம் விடுவிக்கப்பட்டு, அதன் வழியில் எந்த பாதிப்பும் இல்லாமல் மீண்டும் கடலுக்குள் சென்றது.