புதிய மேற்கு சிட்னி சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இது அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
இது சமீபத்தில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும் எதிர்காலத்தில் சோதனை விமானங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முழு செயல்பாடுகளும் தொடங்கும்.
விமான நிலைய கட்டிடங்கள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் மேல் தளங்களில் நிறுவப்பட்ட 9,000 Solar panels மூலம் 1,700 ஹெக்டேர் பரப்பளவில் மின்சாரம் வழங்குவதற்கான திட்டங்கள் நடந்து வருகின்றன.
Qantas, Jetstar மற்றும் Singapore Airlines ஏற்கனவே விமானங்களை இயக்க ஒப்புக் கொண்டுள்ளன. மேலும் Virgin Australiaவும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டில் 5 மில்லியன் பயணிகள் இங்கு பயணிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
2031 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 10 மில்லியன் பயணிகளும், 2063 ஆம் ஆண்டுக்குள் 82 மில்லியன் பயணிகளும் விமான நிலையத்தைப் பயன்படுத்துவார்கள் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
