விக்டோரியா மாநிலத்தில் சமீபத்திய பறவைக் காய்ச்சல் முடிவுக்கு வந்ததாக வேளாண்மை விக்டோரியா அறிவித்ததைத் தொடர்ந்து, கோழிப் பண்ணையாளர்கள் மீண்டும் வடகிழக்கு விக்டோரியாவில் பண்ணைத் தொழிலை ஆரப்பித்துள்ளனர்.
கடந்த பெப்ரவரியில், யூரோவாவிற்கு அருகிலுள்ள நான்கு வணிகங்களில் H7N8 பறவைக் காய்ச்சல் திரிபு கண்டறியப்பட்டது .
இந்த தொற்றுநோய் பரவலால் லட்சக்கணக்கான பறவைகள் கருணைக்கொலை செய்யப்பட வேண்டியிருந்தது. அதே நேரத்தில் அந்தப் பகுதியைச் சுற்றி பறவைகள், பறவை பொருட்கள் மற்றும் கோழி உபகரணங்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் மண்டலங்கள் அமைக்கப்பட்டன.
விக்டோரியாவின் பொறுப்பு தலைமை கால்நடை அதிகாரி சாலி சால்மன், வேளாண்மை விக்டோரியாவின் பணி அந்த கட்டுப்பாடுகளை நீக்க முடியும் என்று கூறினார். மேலும் தொற்றுநோயை ஒழிப்பதில் உதவிய கோழிப்பண்ணைத் தொழில் மற்றும் உள்ளூர் பறவை உரிமையாளர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.
வேளாண் விக்டோரியா அதிகாரிகள் 350 பண்ணைகளைப் பார்வையிட்டு, 20,600 மாதிரிகளை எடுத்து, வைரஸிற்கான 21,500 சோதனைகளை முடித்ததால், ஒவ்வொரு தளத்தையும் சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய 100க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
யூரோவா சம்பவம் ஒரு வருடத்தில் இரண்டாவது பறவைக் காய்ச்சல் வெடிப்பு ஆகும். முதல் வெடிப்பு மே 2024 இல் ஏற்பட்டது. இது தென்மேற்கு விக்டோரியாவில் உள்ள பல பண்ணைகளை பாதித்தமை குறிப்பிடத்தக்கது.