பாலியில் உள்ள ஒரு சுற்றுலா வில்லாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஆஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை காலை துப்பாக்கிச் சூடு நடந்ததாக அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்ததாக Badung காவல்துறைத் தலைவர் Arif Batubara தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட இருவரும் பாலி மாகாண தலைநகரான டென்பசாரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக Badung காவல்துறைத் தலைவர் தெரிவித்தார்.
கொல்லப்பட்ட நபர் மெல்பேர்ணைச் சேர்ந்த 32 வயதான Zivan Radmanovic என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை எனவும், இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.