Newsபாலி தீவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆஸ்திரேலியர் ஒருவர் உயிரிழப்பு

பாலி தீவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆஸ்திரேலியர் ஒருவர் உயிரிழப்பு

-

பாலியில் உள்ள ஒரு சுற்றுலா வில்லாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஆஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை காலை துப்பாக்கிச் சூடு நடந்ததாக அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்ததாக Badung காவல்துறைத் தலைவர் Arif Batubara தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட இருவரும் பாலி மாகாண தலைநகரான டென்பசாரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக Badung காவல்துறைத் தலைவர் தெரிவித்தார்.

கொல்லப்பட்ட நபர் மெல்பேர்ணைச் சேர்ந்த 32 வயதான Zivan Radmanovic என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை எனவும், இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Latest news

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...

பன்றியின் நுரையீரலால் உயிர் பெற்ற ஒரு மனிதன்

உலகில் முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் நுரையீரல் ஒரு மனிதனில் ஒன்பது நாட்கள் செயல்பட்டது. Nature Medicine-ல் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, முதல் முறையாக கலப்பு-இன...

ஈரான் – ஆஸ்திரேலிய உறவில் விரிசல்

ஈரான் அரசுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக, ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த...

Alpine மலைத்தொடரின் வான்வெளி மூடப்பட்டு, பள்ளிகளுக்கு பூட்டு

விக்டோரியாவின் Alpine பகுதியின் கிராமப்புறத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மற்றொருவர் காயமடைந்தனர். அப்பகுதியில் உள்ள வான்வெளியும் மூடப்பட்டுள்ளதாகவும், பல பள்ளிகள்...

பொலீஸார் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் பலி, ஒருவர் படுகாயம்

வடகிழக்கு விக்டோரியாவில் உள்ள ஒரு கிராமப்புற சொத்து மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்றாவது நபர் காயமடைந்த பின்னர்,...