Breaking Newsகனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் சேதம் 

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் சேதம் 

-

கனடாவின், பிரம்ப்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் சேதமாக்கப்பட்டதை கனேடிய தமிழர் தேசிய அவை கண்டித்துள்ளது. 

அறிக்கையொன்றினூடாக இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தின் முக்கிய அம்சங்களை ஒளிரச் செய்யும் பெரும்பாலான விளக்குகள் நேற்று காலை அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மே மாதம் 27 ஆம் திகதி இரவு, தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் சேதப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில், சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கெமராக்களிலிருந்து பெறப்பட்ட படங்கள், காணொளிகளைக் கொண்டு விசாரணைகளை முன்னெடுக்குமாறு கனேடிய காவல்துறையினரை அந்த அமைப்பு கோரியுள்ளது.

சர்வதேச அங்கீகாரம், சர்வதேச பொறுப்புக்கூறல் மற்றும் இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி தேடும் தமிழ் மக்களின் நீண்ட நெகிழ்ச்சியான பயணத்தில், இந்த தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.

அந்த நினைவுச்சின்னத்தைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல், இனப்படுகொலைக்கு எதிராக எழுப்பப்படும் குரல்களை மௌனிக்கச் செய்யும் முயற்சிகளாகும் என்றும் கனேடிய தமிழர் தேசிய அவை சுட்டிக் காட்டியுள்ளது.

Latest news

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு – Meta நிறுவனம் மீது விசாரணை

குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கு உட்படுத்தும் வகையில் தளங்களை அமைத்திருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், Meta நிறுவனம் அடுத்த வாரம் நீதிமன்ற விசாரணைகளை...

சர்ச்சைக்குரிய முழக்கத்தை தடை செய்ய தயாராகும் NSW

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு நாடாளுமன்றக் குழு, பொது இடங்களில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில் பயன்படுத்தப்படும் "Globalise the Intifada" என்ற முழக்கத்தைப் பயன்படுத்துவதைத்...

விக்டோரியாவில் வணிகங்களை கடுமையாகப் பாதிக்கும் சாலை மேம்பாட்டுத் திட்டம்

பக்கென்ஹாம் பகுதியில் உள்ள Bald Hill சாலையில் நடந்து வரும் Big Build Victoria சாலை பழுதுபார்ப்பு காரணமாக ஒரு சிறு வணிகம் மூட வேண்டிய...

Casey தெருக்களில் பார்க்கிங் தொடர்பான சிறப்பு அறிவிப்பு

Casey நகரில் உங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள தெரு தனியார் சொத்து அல்ல என்றும், அந்த இடத்தில் உங்களுக்கு எந்த சிறப்பு உரிமையும் இல்லை என்றும்...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் சிட்னியில் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம்

வெளிநாட்டு விடுமுறையிலிருந்து திரும்பும் சுற்றுலாப் பயணிகளால் சிட்னியில் தட்டம்மை பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என்று நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரம் எச்சரிக்கிறது. டிசம்பர் 1 முதல், சிட்னி...

விக்டோரியாவில் வணிகங்களை கடுமையாகப் பாதிக்கும் சாலை மேம்பாட்டுத் திட்டம்

பக்கென்ஹாம் பகுதியில் உள்ள Bald Hill சாலையில் நடந்து வரும் Big Build Victoria சாலை பழுதுபார்ப்பு காரணமாக ஒரு சிறு வணிகம் மூட வேண்டிய...