Breaking Newsகனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் சேதம் 

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் சேதம் 

-

கனடாவின், பிரம்ப்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் சேதமாக்கப்பட்டதை கனேடிய தமிழர் தேசிய அவை கண்டித்துள்ளது. 

அறிக்கையொன்றினூடாக இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தின் முக்கிய அம்சங்களை ஒளிரச் செய்யும் பெரும்பாலான விளக்குகள் நேற்று காலை அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மே மாதம் 27 ஆம் திகதி இரவு, தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் சேதப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில், சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கெமராக்களிலிருந்து பெறப்பட்ட படங்கள், காணொளிகளைக் கொண்டு விசாரணைகளை முன்னெடுக்குமாறு கனேடிய காவல்துறையினரை அந்த அமைப்பு கோரியுள்ளது.

சர்வதேச அங்கீகாரம், சர்வதேச பொறுப்புக்கூறல் மற்றும் இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி தேடும் தமிழ் மக்களின் நீண்ட நெகிழ்ச்சியான பயணத்தில், இந்த தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.

அந்த நினைவுச்சின்னத்தைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல், இனப்படுகொலைக்கு எதிராக எழுப்பப்படும் குரல்களை மௌனிக்கச் செய்யும் முயற்சிகளாகும் என்றும் கனேடிய தமிழர் தேசிய அவை சுட்டிக் காட்டியுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் சிறப்பு மருத்துவர் வருகைகளுக்கான கட்டணம் உயர்வு

ஆஸ்திரேலியர்கள் நிபுணர்களைப் பார்க்க நிறைய பணம் செலவிடுகிறார்கள் என்பதை ஒரு புதிய பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10 ஆஸ்திரேலியர்களில் ஒருவர் சிறப்பு மருத்துவர்களின் வருகைக்காக $600...

வாடிக்கையாளர்களுக்கு Spam செய்ததற்காக TabCorp நிறுவனத்திற்கு $4 மில்லியன் அபராதம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பந்தய நிறுவனமான Tabcorp, Spam சட்டங்களை மீறியதற்காக 4 மில்லியன் டாலர்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Spam சட்டங்களை நிர்வகிக்கும் ஆஸ்திரேலிய தொடர்பு மற்றும்...

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்கு விரைவில் வரவுள்ள ஒரு புதிய காய்கறி

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளின் காய்கறி அலமாரிகளில் இங்கிலாந்து ஒரு புதிய மாற்றத்தைச் செய்துள்ளது. இதன் மூலம் தக்காளியின் நிறம் கத்தரிக்காய்களைப் போன்று காணப்படுகிறது. இந்த ஆலை இங்கிலாந்தில்...

பாலியில் ஆஸ்திரேலியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை தேடும் பணிகள் தீவிரம்

வார இறுதியில் பாலியில் ஆஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டு, மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக பாலி போலீசார் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இறந்தவர் பாலி, Canggu...

பாலியில் ஆஸ்திரேலியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை தேடும் பணிகள் தீவிரம்

வார இறுதியில் பாலியில் ஆஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டு, மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக பாலி போலீசார் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இறந்தவர் பாலி, Canggu...

இஸ்ரேல் மற்றும் ஈரானில் இருந்து வெளியேற உதவி கோரும் நூற்றுக்கணக்கான ஆஸ்திரேலியர்கள்

பதட்டங்கள் அதிகரித்து வருவதால், நூற்றுக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் இஸ்ரேல் மற்றும் ஈரானில் இருந்து வெளியேற உதவி கேட்டுள்ளனர். பொதுமக்கள் விமானங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால்,...