அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இடையேயான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கனடாவில் நடைபெறும் G7 உச்சிமாநாட்டிலிருந்து டொனால்ட் டிரம்ப் முன்கூட்டியே வெளியேறுவார் என்று வெள்ளை மாளிகை அறிவித்ததை அடுத்து இந்த தகவல் வெளிவந்துள்ளது.
வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் Karoline Leavitt எக்ஸ் தளத்தில் ஒரு செய்தியில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
G7 உச்சிமாநாட்டின் போது, அதிபர் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் Keir Starmer-உடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார்.
இருப்பினும், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக, அதிபர் டிரம்ப், நாட்டுத் தலைவர்களுடன் இரவு உணவுக்குப் பிறகு புறப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உச்சிமாநாட்டின் போது பிரதமர் அல்பானீஸ் மற்ற வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்க உள்ளார்.
வரி பிரச்சினைகள் மற்றும் பல பிரச்சினைகள் காரணமாக இங்கு கவனம் டிரம்ப் மீது இருந்தது.