வறட்சியால் பாதிக்கப்பட்ட தனது அண்டை வீட்டாருக்கு உதவச் சென்றதற்காக விக்டோரியன் விவசாயி ஒருவருக்கு $398 அபராதம் விதிக்கப்பட்டது.
Graham Thomson என்ற இந்த விவசாயி, தனது டிராக்டரைப் பயன்படுத்தி பக்கத்து வீட்டுக்காரருக்கு பல மூட்டை வைக்கோலை விநியோகித்துக் கொண்டிருந்தார்.
அவர் சாலையில் சுமார் 600 மீட்டர் தூரம் பயணித்தபோது, ஒரு தேசிய கனரக வாகன அதிகாரி அவரை நிறுத்தி அபராதம் விதித்தார்.
இந்த முறையில் வைக்கோல் மூட்டைகளை எடுத்துச் செல்வது சட்டவிரோதமானது என்றும், அவை பாதுகாப்பாகக் கட்டப்படாததால் விதிகள் மீறப்பட்டுள்ளன என்றும் அந்த அதிகாரி கூறினார்.
Graham Thomson தனது 50 ஆண்டுகால விவசாயத்தில், இதுபோன்ற ஒரு சட்டத்தைப் பற்றி ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை என்று கூறினார்.
இந்த சம்பவத்திற்கு விக்டோரியன் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், மேலும் Graham Thomson-இற்காக ஒரு GoFundMe பக்கம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.