சிட்னியில் உள்ள Downing Centre நீதிமன்ற வளாகம் இந்த வார தொடக்கத்தில் ஏற்பட்ட வெள்ள சேதம் காரணமாக மூடப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மிகவும் பரபரப்பான இந்த நீதிமன்றம், 4 வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிட்னியில் உள்ள Castlereagh தெருவில் உள்ள பிரதான நீர் குழாய் வெடித்ததால் நீதிமன்ற வளாகம் கடுமையாக சேதமடைந்துள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் காலை 10 மணிக்கு முன்பு, நீதிமன்ற அமர்வுகளின் நடுவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, மேலும் கட்டிடத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் அண்டை கட்டிடங்களும் பாதிக்கப்பட்டன.
கட்டிடத்தின் உள்கட்டமைப்பு, மின்சாரம், தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் பிற உபகரணங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக நீதிமன்ற ஊடகக் குழு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக விசாரிக்கப்பட்டு வந்த பல வழக்குகள் நிறுத்தப்பட வேண்டியிருக்கும் என்று NSW மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
வெள்ளப்பெருக்கு சூழ்நிலை காரணமாக சில வழக்குகள் நிறுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் குறிப்பிட்டு, மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடமிருந்து தங்களுக்கு அறிவிப்பு வந்ததாக NSW வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நியூ சவுத் வேல்ஸ் வழக்கறிஞர்கள் சங்கம், பெருநகரப் பகுதியில் வேறு இடங்களில் நீதிமன்ற அறைகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகக் கூறுகிறது.