நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு பள்ளிப் பேருந்து ஓட்டுநரின் மின்னணு சாதனங்களில் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
65 வயதான ஓட்டுநர் Port Macquarie-இல் உள்ள அவரது வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவரது மின்னணு சாதனங்களில் குழந்தை துஷ்பிரயோகப் பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அவர் மீது பல குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
அவர் Port Macquarie பிராந்திய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரது ஜாமீன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 21 ஆம் திகதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.