ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த பெண்கள் தங்கள் விசா நிபந்தனைகளை மீறுவதைத் தவிர்ப்பதற்காக தன்னிடம் கருக்கலைப்பு செய்ய முயல்வதாக ஒரு மகப்பேறு மருத்துவர் நாடாளுமன்ற விசாரணையில் தெரிவித்துள்ளார்.
தற்காலிக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அடிமைத்தனத்தின் ஆபத்து குறித்த NSW விசாரணை வியாழக்கிழமை கிரிஃபித்தில் முதல் பிராந்திய விசாரணையை நடத்தியது.
கிராமப்புற மற்றும் பிராந்திய NSW இல் விவசாயம், தோட்டக்கலை மற்றும் இறைச்சி பதப்படுத்தும் துறைகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அனுபவங்களை இந்த விசாரணை ஆராய்கிறது.
NSW Riverina நகரமான Wagga Wagga-ஐ சேர்ந்த பொது மருத்துவரான டாக்டர் Trudi Beck, புலம்பெயர்ந்த பெண்களின் “கண்ணுக்குத் தெரியாத மக்கள் தொகை” ஒன்று வழக்கமாக விரும்பாத கருக்கலைப்புகளை நாடுவதாக விசாரணையில் தெரிவித்தார்.
“நாங்கள் வருடத்திற்கு 500 முதல் 600 கர்ப்பிணிப் பெண்களுக்கு சேவைகளை வழங்குகிறோம்,” என்று டாக்டர் Beck கூறினார்.
தேவையற்ற கருக்கலைப்பு நிலைமை பெண்களுக்கு ஒரு வகையான நவீன அடிமைத்தனத்திற்கு சமம் என்று டாக்டர் Beck கூறினார்.
டாக்டர் பெக், அதிக எண்ணிக்கையிலான PALM தொழிலாளர்களைக் கொண்ட முதலாளிகளை நேரில் அணுகி, பெண்களுக்கு கல்வி கற்பிப்பதிலும், இனப்பெருக்க சுகாதாரத்தை வழங்குவதிலும் அவர்களின் உதவியைக் கேட்டதாகக் கூறினார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சில தரமற்ற வாழ்க்கை நிலைமைகள் குறித்தும் விசாரணையில் கூறப்பட்டது.