பத்து மாணவிகளுக்கு வலுக்கட்டாயமாக போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த மாணவருக்கு லண்டன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பத்து பெண் மாணவிகளில் சீன மற்றும் பிரிட்டிஷ் பிரஜைகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 வயதான சீன மாணவர் Zhenhao Zou ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டு, இன்று அவருக்கு நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த மாணவி மீது 11 பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள், 3 பாலியல் துஷ்பிரயோகம், வக்கிரமான ஆபாசப் படங்களை வைத்திருந்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்யும் நோக்கத்துடன் போதைப்பொருள் வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவர் தனது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பெண் மாணவர்களை கவர்ந்து, அவர்களுக்கு போதைப்பொருட்களை வழங்க WeChat மற்றும் டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்தியது நீதிமன்றத்தில் தெரியவந்தது.
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நகைகள், ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் இந்த நபர் எடுத்துச் சென்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.