குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கையின்படி, இஸ்ரேல் அதிக குழந்தைகள் உரிமை மீறல் விகிதத்தைக் கொண்ட நாடாக மாறியுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிரான குழந்தை உரிமை மீறல்களின் எண்ணிக்கை 8,554 ஆக பதிவாகியுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பாலஸ்தீனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களாகும்.
குழந்தைகளுக்கு எதிரான 41,370 கடுமையான மீறல்கள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 25% அதிகமாகும்.
இவற்றில், 22,495 அறிக்கைகள் குழந்தைகளை நேரடியாக குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஆகும்.
18,875க்கும் மேற்பட்ட பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மனிதாபிமான வசதிகள் தாக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை காட்டுகிறது.
இஸ்ரேலைத் தவிர, அரசாங்கப் படைகளால் செய்யப்படும் கடுமையான மீறல்களுக்குப் பொறுப்பான பிற நாடுகளில் ரஷ்யா, சிரியா, காங்கோ குடியரசு, மியான்மர் மற்றும் சோமாலியா ஆகியவை அடங்கும்.