குழந்தையின் முகத்தில் சூடான காபியை வீசிய ஒருவரை கைது செய்ய குயின்ஸ்லாந்து காவல்துறை சர்வதேச உதவியை நாடியுள்ளது.
கடந்த ஆண்டு, பிரிஸ்பேர்ணின் Stones Corner-இல் உள்ள Hanlon பூங்காவில் தனது தாயுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, சந்தேக நபர் குழந்தையை அணுகி, சூடான காபியை அவர் மீது வீசினார்.
இந்தத் தாக்குதலில் 9 மாதக் குழந்தையின் முகம், கைகள் மற்றும் கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும், 4 அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்ததாகவும் அந்தத் தாய் கூறினார்.
10 மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் இந்த சம்பவத்தில் குயின்ஸ்லாந்து காவல்துறையினரால் இன்னும் சந்தேக நபரை கைது செய்ய முடியவில்லை.
இது மிகவும் கடுமையான குற்றம் என்றும், இந்த விஷயத்தில் சர்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் குயின்ஸ்லாந்து காவல் சேவையின் செயல் ஆணையர் Shane Chelepy கூறினார்.
சந்தேக நபர் இப்போது சீனாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார், அவரது புகைப்படங்கள் சீன ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
