
கொழும்பைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, ஜெர்மனி Mengede, Dortmund, Wuppertal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வலிங்கம் நவநீதன் அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வலிங்கம், லீலா (ஓய்வு பெற்ற ஆசிரியை – இந்துக்கல்லூரி, பம்பலப்பிட்டி) தம்பதிகளின் அன்பு மகனும், அன்னராஜா ராஜரதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜனனி அவர்களின் அன்புக் கணவரும், வைஷ்ணவி, ஆர்யா, அஞ்சலி ஆகியோரின் அன்பு தந்தையும்,
மோகனராஜா, சுமதி ஆகியோரின் அன்பு சகோதரரும், தவீசன், மேனகா, ஜனன், துசானி ஆகியோரின் மைத்துனரும்,
விஜயசுதன் அவர்களின் அன்புச் சகலனும், மதுரா, மதுஷா, மகிழினி, விஷ்வா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
யாதவன், நிருத்திகா, பவன்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.