கால்பந்து நடுவராக இருந்தபோது தான் மேற்பார்வையிட்ட குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததற்காக, பழங்குடியின முதியவரும் Victorian Senior of the Year விருது வென்றவருமான ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
72 வயதான Robert Eccles, 2021 ஆம் ஆண்டில் உள்ளூர் விளையாட்டுக்கான விக்டோரியன் மூத்த தன்னார்வலர் விருதை வென்றார்.
16 வயதுக்குட்பட்ட குழந்தை மீது அநாகரீகமான செயலைச் செய்தல் மற்றும் அவரது பராமரிப்பில் உள்ள 16 அல்லது 17 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தல் உள்ளிட்ட நான்கு குழந்தை துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.
இன்று மெல்பேர்ண் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் Eccles ஆஜரானார், அவருக்கு கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தலைமை நீதிபதி அமண்டா சேம்பர்ஸ், தனது பராமரிப்பில் உள்ள ஒரு குழந்தைக்கு எதிரான அவரது குற்றம் நம்பிக்கை மீறல் மற்றும் மோசமான நடத்தை என்று கூறினார்.
இதற்கிடையில், விருதுக்காக அவர் பெற்ற கோப்பை மற்றும் சான்றிதழைத் திருப்பித் தருமாறு கோரி அரசாங்கம் கடிதங்களை அனுப்பியுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.