Newsகுடலில் 52 ஆண்டுகள் Toothbrush உடன் வாழ்ந்த நபர்

குடலில் 52 ஆண்டுகள் Toothbrush உடன் வாழ்ந்த நபர்

-

வயிற்று வலியால் அவதிப்பட்ட 64 வயது நபரின் குடலில் Toothbrush இருந்ததைக் கண்டு வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிட்டத்தட்ட இந்த Toothbrush அவரின் குடலில் 52 ஆண்டுகள் இருந்திருக்கிறது.

சீனாவைச் சேர்ந்த யாங் என்பவர் வயிற்று வலியால் வைத்தியசாலைக்கு சென்றபோது அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவரின் குடலில் Toothbrush இருந்ததை கண்டறிந்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்து 80 நிமிடங்களில் அந்த Toothbrush-ஐ அகற்றி உள்ளனர்

யாங் தனது 12 வயதில் Toothbrush-ஐ விழுங்கியதாகவும் இது குறித்து தனது பெற்றோரிடம் சொல்ல பயந்ததாகவும் கூறியிருக்கிறார்.இதுவரை எந்தவிதமான அசாதாரணமும் தனது உடலில் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு நோயாளியின் செரிமான அமைப்பிலிருந்து ஒரு பொருளை அகற்ற வைத்தியசாலையில் எடுத்துக் கொண்ட மிக நீண்ட நேரம் இது என்றும் வைத்தியர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

வைத்திய நிபுணர்களின் கூற்றுப்படி, ”குடலில் இருக்கும் Toothbrush அங்கும் இங்கும் நகர்ந்து, திசுக்களை துளைத்து, குடல்களை துளைத்து உயிருக்கு ஆபத்தான நிலையைக்கூட ஏற்படுத்தக் கூடும்.

ஆனால் யாங்கின் விடயத்தில் இந்த Toothbrush அதிர்ஷ்டவசமாக குடலின் ஒரு வளைவில் சிக்கிக் கொண்டது. அதனால்தான் அந்த Toothbrush 52 ஆண்டுகளாக அவரது வயிற்றில் அசையாமல் இருந்துள்ளது.

இதனால்தான் அவரின் உடலில் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை. இது நம்ப முடியாத ஒன்றாக இருப்பதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

Latest news

முர்ரே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்

நியூ சவுத் வேல்ஸ்/விக்டோரியன் எல்லையில் உள்ள மில்டுரா அருகே முர்ரே நதிக்கு அப்பால் உள்ள புதர் நிலத்தில் மனித மண்டை ஓட்டின் பகுதி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை...

பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கும் இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான Qantas மற்றும் Jetstar, இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு கிடைக்கவுள்ள பணப் பலன்கள்

அரசாங்க விசாரணையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வங்கிகள் 93 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பெரிய அளவிலான...

காஸாவில் இதுவரை 60,000 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் மாயம்

காஸா பகுதியில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் ஒக்டோபர் 7, 2023 முதல் இன்றுவரை குறைந்தது 60,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, என்கிளேவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு...

தன் மகன்களை வேற்றுகிரகவாசிகள் என நினைத்து கொல்ல முயன்ற தாய்

தனது இரண்டு மகன்களைக் குத்திக் கொல்ல முயன்ற தாய்க்கு 15 ஆண்டுகள் மனநலக் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடிலெய்டில் வசித்து வந்த ஒரு பெண், தனது இரண்டு மகன்களையும்...

வேப் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளதா?

வேப்பிங் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளது என்பதைக் குறிக்கும் ஆராய்ச்சியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஜூலை 2024 இல் தொடங்கிய வேப் விற்பனையின் படிப்படியான தடைக்குப் பிறகு...