சிட்னி பல்கலைக்கழகத்தில் சைபர் தாக்குதல்களின் அலையைத் தொடங்கியதாக முன்னாள் மாணவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு, 27 வயதான Birdie Kingston, வளாகத்தில் இலவச வாகன நிறுத்துமிடத்தைப் பெறுவதற்காக பள்ளியின் சேவையகங்களை முதன்முதலில் அணுகியதாகக் கூறப்படும் போது, Hackகள் தொடங்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
அன்றுமுதல் அங்கீகரிக்கப்படாத அணுகல், தரவு நீக்கம், அமைப்பு சமரசம் மற்றும் பல்கலைக்கழக உள்கட்டமைப்பை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட தொடர்ச்சியான Cyber Hackingகளை எதிர்கொள்கிறது.
மாணவர்களின் தரவை dark web-இல் விற்பனை செய்வதாகவும் அச்சுறுத்தல்கள் வந்தன. இது ஏராளமான ஊழியர்கள் மற்றும் மாணவர்களைப் பாதித்தது.
Kingswood பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்தி குறித்த பெண்ணை கைது செய்தனர்.
அவள் அந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தேடுதலின் போது பல கணினி உபகரணங்கள் மற்றும் மொபைல் சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.