ரஷ்யாவில் உள்ள ஒரு விமான நிலையத்தில் 18 மாத குழந்தை மீது நடத்தப்பட்ட அதிர்ச்சியூட்டும் மரண தாக்குதல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
விமான நிலையத்தில் நின்றிருந்த ஒருவர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு தரையில் வீசுவதை CCTV காட்சிகள் காட்டுகின்றன.
உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் குழந்தை கோமா நிலைக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையின் தாய் கர்ப்பமாக இருந்ததால், தாக்குதல் நடந்தபோது குழந்தையை தள்ளுவண்டியை எடுத்து வர விட்டுச் சென்றிருந்தார்.
தாயும் குழந்தையும் ஈரானிய மோதலில் இருந்து தப்பி ரஷ்யாவிற்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், சந்தேக நபர் பெலாரஷ்ய நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதே நாளில் ரஷ்யாவிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.