Newsசூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படுமா பூமி?

சூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படுமா பூமி?

-

அதாவது வரும் காலத்தில் பூமியின் சுற்றுப்பாதை மாறக்கூடும் என்றும் அது மற்ற கிரகங்களின் பாதை அல்லது அவ்வளவு ஏன் சூரியனுக்குள் கூட வீசப்படலாம் என்றும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே சூரியன் 50 கோடி ஆண்டுகளில் அழியலாம் என்றும் அப்போது அது பூமியையும் அழித்துவிடும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அது நடப்பதற்கு இப்படிப் பூமி தூக்கியடிக்கப்படும் சம்பவம் நடக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

நமது Solar System அருகே கடந்து போகும் ஆகும் நட்சத்திரங்களால் பூமியின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து ஏற்படலாம் என அவர்கள் எச்சரித்துள்ளனர். வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து பல ஆயிரம் computer modelகளை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள் Icarus இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் Passing star முன்பு மதிப்பிட்டதை விட அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு நட்சத்திரம் சுமாராகச் சூரியனின் நிறை அளவுக்கு இருந்தால், அது ப்ளூட்டோவுக்கு வெளியே இருக்கும் நமது சூரிய மண்டலத்தின் எல்லையாகக் கருதப்படும் Oort Cloud-ஐ கூட கணிசமாகச் சீர்குலைக்கக்கூடும் என்றும் இந்த ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில் மேலும், “அடுத்த நான்கு பில்லியன் ஆண்டுகளில், பூமியை கடக்கும் நட்சத்திரங்கள் தான் சுற்றுப்பாதை மாறுவதற்கான முக்கிய காரணமாக இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் மற்றும் புளூட்டோ ஆகியவை முன்பு நினைத்ததை விட மிகவும் நிலையற்றவை என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானியலாளர்கள் Nathan Kip மற்றும் Sean Raymond ஆகியோர் கூறுகையில், “நமது சூரிய மண்டலத்தில் சில சிக்கல்கள் உள்ளன. பெரிய கிரகங்களின் சுற்றுப்பாதைகள் சில காரணங்களால் மாறலாம். கூடுதலாக, நமது கிரகங்கள் மற்றும் புளூட்டோ முன்பு நினைத்ததை விட மிகவும் நிலையற்றவையாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசையால், புதன் கிரகம் தனது பாதையில் இருந்து விலகிச் செல்ல 50-80 சதவீதம் வரை வாய்ப்பு இருக்கிறது. அதேபோல ஐந்து பில்லியன் ஆண்டுகளில் புளூட்டோவும் இதுபோல விலகிச் செல்ல 5 சதவீதம் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில், “அதேபோல செவ்வாய்க் கிரகம் வேறு கிரகத்தில் மோத அல்லது சூரியக் குடும்பத்தில் இருந்து தூக்கி வீசப்பட 0.3% வாய்ப்பு இருக்கிறது. அதுபோல பூமி சூரியக் குடும்பத்தில் இருந்து தூக்கி வீசப்பட அல்லது வேறு கிரகத்தில் மோத 0.2 சதவீதம் வாய்ப்புள்ளது” என்றனர்.

ஒருவேளை பூமியை கடக்கும் நட்சத்திரத்தால் புதன் கிரகத்தின் சுற்றுப்பாதை மாறினால், வீனஸ் அல்லது செவ்வாய் கிரகங்கள் பூமியுடன் மோதக்கூடும். வேறு சில சமயங்களில், பூமி சூரியனுடன் கூட மோதலாம்.. அல்லது வீனஸ் மற்றும் செவ்வாய் கிரகங்கள் பூமியை வியாழன் கிரகத்தை நோக்கித் தள்ளக்கூடும். அதன் பிறகு, வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு விசை பூமியைச் சூரிய மண்டலத்திலிருந்து வெளியேற்றும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

Latest news

மருத்துவ ஆலோசனையின் பேரில் கஞ்சா பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு அபராத விலக்கு அளிக்கப்படுமா?

மருத்துவ ஆலோசனையின் பேரில் கஞ்சாவைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமங்களை இழப்பதிலிருந்தும் அபராதங்களை எதிர்கொள்வதிலிருந்தும் பாதுகாக்க நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் ஒரு மசோதாவை...

ஒரு இடம் பின்தங்கியுள்ள உலக தரவரிசையில் ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலிய விமான நிறுவனங்களால் நடத்தப்படும் அடிக்கடி பறக்கும் விமானத் திட்டங்கள் உலக தரவரிசையில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் விமான விசுவாசத் திட்டங்களில்...

விமானி கடத்தல் சம்பவத்தில் இரு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம்

நியூசிலாந்து விமானி கடத்தப்பட்ட வழக்கில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானியைக் கடத்தியதற்குப் பொறுப்பான இந்தோனேசியாவில் உள்ள ஒரு வன்முறை துணை...

அதிக வெப்பமான Cabin-இல் 2 மணி நேரம் சிக்கிக் கொண்ட பயணிகள்

Air India விமானத்தில் குளிரூட்டும் முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயணிகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மிகவும் சூடான கேபினிலேயே இருக்க வேண்டிய கட்டாயம்...

விமானி கடத்தல் சம்பவத்தில் இரு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம்

நியூசிலாந்து விமானி கடத்தப்பட்ட வழக்கில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானியைக் கடத்தியதற்குப் பொறுப்பான இந்தோனேசியாவில் உள்ள ஒரு வன்முறை துணை...

மெல்பேர்ணுக்கு 500,000 புதிய மரங்கள்

மெல்பேர்ணை பசுமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரமாக மாற்ற விக்டோரியன் அரசாங்கம் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. மெல்பேர்ண் முழுவதும் 500,000 புதிய மரங்களை நடுவதற்கு 9.5...