Cinemaநடிகை சரோஜா தேவியின் கண்கள் 2 குழந்தைகளுக்கு தானம்

நடிகை சரோஜா தேவியின் கண்கள் 2 குழந்தைகளுக்கு தானம்

-

மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் கண்கள், இரு குழந்தைகளுக்கு இன்று பொருத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

87 வயதைக் கடந்த சரோஜா தேவியின் கண்கள் நல்ல நிலையில் உள்ளதாகவும், பிறருக்குப் பொருத்த ஏதுவாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, உடல்நலக்குறைவு காரணமாகப் பெங்களூருவில் உள்ள இல்லத்தில் நேற்று காலமானார். 

இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

அத்துடன், இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் சரோஜா தேவி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இவரின் மறைவுக்குப் சினிமா வட்டாரங்கள், அரசியல் வட்டாரங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Latest news

FOGO DUSTUBIN பற்றி ஆஸ்திரேலியர்கள் தெரிவித்த கருத்துக்கள்

ஆஸ்திரேலிய நகராட்சிகளில் கழிவுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் FOGO குப்பைத் தொட்டிகளின் அறிமுகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இது குறித்து பொதுமக்களிடையே கலவையான எதிர்வினைகள் இருப்பதாகத் தெரிகிறது....

பிறப்புகளை அதிகரிக்க அரசாங்கத்திடமிருந்து $5,000 போனஸ்

நாடு முழுவதும் குறைந்து வரும் கருவுறுதல் விகிதத்திற்கு தீர்வாக, குழந்தை போனஸை மீண்டும் வழங்க மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, புதிய பெற்றோருக்குப் பிறக்கும் ஒவ்வொரு...

NSW வெள்ளத்தில் காணாமல் போன பெண்ணும் காரும்

நியூ சவுத் வேல்ஸின் ஹண்டர் பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு பெண் தனது காருடன் காணாமல் போயுள்ளார். மாநிலம் தற்போது பலத்த மழையை அனுபவித்து வருகிறது. நேற்று...

பார்வையற்றவர்களுக்கு நாடு தழுவிய ரீதியில் Uber சலுகைகள்

பார்வையற்றோர் அல்லது பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கான டாக்ஸி மானியத் திட்டங்களில் Uber சேவைகளைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. மாநில அரசுகள், தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு டாக்ஸி சேவைகளுக்கான...

உலகின் வயதான கருவில் பிறந்த குழந்தை பதிவு

உலகின் பழமையான கருவில் இருந்து பிறந்த குழந்தை அமெரிக்காவிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 26, 2025 அன்று பிறந்த அந்தக் குழந்தைக்கு Thaddeus Daniel Pierce என்று பெயரிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட...

பிரசவத்திற்கு முன்பு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்த ஆஸ்திரேலிய தாய்

பெர்த்தைச் சேர்ந்த 34 வயது கர்ப்பிணித் தாயான Kezia Summers, தனது குழந்தை பிறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் நடத்திய இரத்தப்...