மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் கண்கள், இரு குழந்தைகளுக்கு இன்று பொருத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
87 வயதைக் கடந்த சரோஜா தேவியின் கண்கள் நல்ல நிலையில் உள்ளதாகவும், பிறருக்குப் பொருத்த ஏதுவாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, உடல்நலக்குறைவு காரணமாகப் பெங்களூருவில் உள்ள இல்லத்தில் நேற்று காலமானார்.
இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அத்துடன், இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் சரோஜா தேவி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரின் மறைவுக்குப் சினிமா வட்டாரங்கள், அரசியல் வட்டாரங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.