Newsபாகிஸ்தானில் அரங்கேறிய இராமாயணம்!

பாகிஸ்தானில் அரங்கேறிய இராமாயணம்!

-

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி நகரில், இராமாயண நாடகம் அரங்கேற்றப்பட்டது. இதற்கு அங்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

மௌஜ் என்ற நாடக குழுவினர் செயற்கை நுண்ணறிவின் உதவியுன் இந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்தனர். நாடகத்தை யோகேஸ்வர் கரேரா என்பவர் இயக்கியுள்ளார். இந்த நாடகத்துக்கு மக்கள் இடையே வரவேற்பும், விமர்சகர்களின் பாராட்டுகளும் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக யோகேஸ்வர் கூறுகையில், இராமாயணத்தை மேடையில் அரங்கேற்றியது சிறப்பானது. இதற்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதனால் எந்த பின்னடைவும், பாதுகாப்பு சவால்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இதேவேளை உமைர் அலவி என்ற விமர்சகர் கூறுகையில், ‘ கதை சொல்வதில் உள்ள நேர்த்தியிலும், நேரடி இசை , வண்ணமயமான உடைகள் மற்றும் மனதை தொடும் வடிவமைப்புகள் அனைத்தும் நிகழ்ச்சியின் பிரமாண்டத்துக்கு கூடுதல் அழகை கொடுத்தது. உலகெங்கும் உள்ள இலட்சக்கணக்கான மக்களை எதிரொலிக்கும் ஒரு நிகழ்வு என்பதால், சிறப்பாக அமைந்தது எனத் தெரிவித்தார்.

இராமாயண நாடகத்தை தயாரித்த ராணா காஸ்மி, சீதையாக நடித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

தவறான தீர்ப்பால் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆஸ்திரேலிய பெண்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், சொந்த குழந்தைகளின் மரணத்திற்காக இரண்டு தசாப்தங்களாக தவறாக சிறையில் அடைக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 1.31 மில்லியன் டொலர் இழப்பீடு...

நிலவை முதல் முறை சுற்றி வந்த விண்வெளி வீரர் காலமானார்

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் Jim Lovell அவரது 97 ஆவது வயதில் காலமாகியுள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியிலுள்ள அவரது...

ஆஸ்திரேலியா அணுசக்தியை நிராகரித்தால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

அணுசக்தியை நிராகரித்தால் ஆஸ்திரேலியா எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இங்கிலாந்து தலைமை அறிவியல் ஆலோசகர் ராபின் கிரிம்ஸ் எச்சரித்துள்ளார். சிட்னியில் அணுசக்தி தொடர்பான ஒரு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் லித்தியம் அயன் பேட்டரி தீ விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மேற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்துகளின் எண்ணிக்கை, 2020 ஆம்...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்துவரும் காய்ச்சல் – தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தல்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் காய்ச்சல் பாதிப்புகள் 20% அதிகரித்துள்ளது. பதிவான காய்ச்சல் பாதிப்புகளில் 89% தடுப்பூசி போடப்படாதவை என்று சுகாதாரத் துறை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு காய்ச்சல்...

GPT-5 ஐ வெளியிட்டுள்ளது Open AI

நவம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட GPT, இப்போது உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ChatGPT இன் புதிய பதிப்பான GPT – 5, புதிதாக வெளியிடப்பட்ட...