Newsஒபாமா – மிச்சல் தம்பதி விவாகரத்து என பரவிவரும் வதந்தி

ஒபாமா – மிச்சல் தம்பதி விவாகரத்து என பரவிவரும் வதந்தி

-

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா – அவரது மனைவி மிச்சல் ஒபாமா இருவரும் விவாகாரத்துப் பெறப்போவதாக எழுந்தது உண்மையில்லை, என்று இருவரும் ஒன்றாக ஒரு வெளிநாட்டு ஊடகமொன்றில் தோன்றி உறுதி செய்துள்ளனர்.

சில நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாகப் பங்கேற்காத நிலையில், இந்த விவாகரத்து தொடர்பான வதந்தி பரவியுள்ளது.

இந்த நிலையில்தான், மிச்சல் ஒபாமா தன்னுடைய சகோதரருடன் இணைந்து நடத்தும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியின்போது, ஒபாமாவும் தோன்றி பேசினார்.

அப்போது, இருவரும் தங்களுக்கே உரிய நகைச்சுவை மற்றும் சாதாரண பேச்சு வழக்கில், தங்களுக்கு இடையே விவாகரத்து என்பது வெறும் வதந்திதான், நாங்கள் நீடித்த, மிகவும் அன்பான வாழ்க்கையை தொடர்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை உறுதி செய்துள்ளனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய மிச்சல், இவர் எனது கணவர் என்று அன்போடு கூறினார். அப்போது, மிச்சலின் சகோதரர் கிரெய்க், இருவரையும் ஆரத் தழுவினார். உங்கள் இருவரையும் ஒரே அறையில் இன்று பார்ப்பது மிகவும் சிறப்பாக உள்ளது என கிரெய்க் கூற, அதற்கு சிரித்தபடி, மிச்சல், ஆமாம், எனக்குத் தெரியும். நாங்கள் விவாகரத்துப் பெறாவிட்டாலும், பெற்றுவிட்டதாகக் கூறுகிறார்கள் என்றார்.

Latest news

GPT-5 ஐ வெளியிட்டுள்ளது Open AI

நவம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட GPT, இப்போது உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ChatGPT இன் புதிய பதிப்பான GPT – 5, புதிதாக வெளியிடப்பட்ட...

பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்திலிருந்து விலகு நாடுகள்

உலகளாவிய பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஒப்பந்தத்திற்கான இறுதிச் சுற்று பேச்சுவார்த்தைகளில் ஆஸ்திரேலியாவும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளும் தற்போது ஈடுபட்டுள்ளன. பிரபல பிரிட்டிஷ்...

ஆஸ்திரேலிய நியூசிலாந்து பிரதமர்களிடையே பேச்சுவார்த்தை

சனிக்கிழமை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இடையேயான பேச்சுவார்த்தைகளில் பசிபிக் பகுதியில் சீனாவின் இருப்பு மற்றும் மத்திய கிழக்கில்...

சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 10 பேர் பலி – 33 பேரை காணவில்லை

வடமேற்கு சீனாவின் கான்சு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 33 பேர் காணாமல் போயுள்ளதாக சீன அரசு ஊடகங்கள்...

சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 10 பேர் பலி – 33 பேரை காணவில்லை

வடமேற்கு சீனாவின் கான்சு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 33 பேர் காணாமல் போயுள்ளதாக சீன அரசு ஊடகங்கள்...

பெர்த் கார் நிறுத்துமிடத்தில் நடந்த மர்ம மரணம்

பெர்த்தின் தெற்கு புறநகர்ப் பகுதியில் நடந்த ஒரு சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து கொலைப் பிரிவு துப்பறியும் நபர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளிக்கிழமை இரவு Cockburn Central-ல் உள்ள...