News'கேப்டனின் தற்கொலை' - Air India விபத்து விசாரணை

‘கேப்டனின் தற்கொலை’ – Air India விபத்து விசாரணை

-

200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட Air India விமான விபத்து “கேப்டனின் தற்கொலை” காரணமாக ஏற்பட்டதாக ஒரு விமானப் போக்குவரத்து நிபுணர் நம்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாத விபத்து தொடர்பான விசாரணையில் இருந்து புதிய தகவல்கள், மூத்த விமானி ஒருவர் விமானத்தின் இயந்திரங்களுக்கு எரிபொருள் ஓட்டத்தை கட்டுப்படுத்தும் switchகளை அணைத்துவிட்டதாகக் குறிப்பிடுகின்றன.

ஜூன் 12 அன்று 260 பேரைக் கொன்ற அகமதாபாத் விபத்து தொடர்பான விசாரணையின் மீதான அமெரிக்க அதிகாரிகளின் மதிப்பீட்டில், முன்னணி விமானி Sumeet Sabharwal மீது கவனம் திரும்பியுள்ளதாக Wall Street Journal தெரிவித்துள்ளது.

கருப்புப் பெட்டி (Black Box) கண்டுபிடிப்புகளின் பகுப்பாய்வின்படி, விமானம் 171 ஓடுபாதையில் இருந்து உயர்ந்த சிறிது நேரத்திலேயே கேப்டன் Sabharwal switchகளை “cut-off” நிலைக்கு நகர்த்தியதாக நம்பப்படுகிறது. ஏனெனில் கேப்டனால் மட்டுமே குறித்த switchகளை அணைத்திருக்க முடியும்.

விமானத்தை ஓட்டுவதில் துணை விமானி மும்முரமாக இருந்திருப்பார். விமானத்தை கண்காணிக்கும் மூத்த விமானி மட்டுமே இயந்திர switchகளை நகர்த்தும் திறன் கொண்டவராக இருந்திருப்பார்.

“இது நிச்சயமாக கேப்டனின் தற்கொலை என்று நாங்கள் நினைக்கிறோம்,” என்று Sky News விமானப் போக்குவரத்து நிபுணர் Byron Bailey கூறினார்.

இந்தநிலையில், இறுதி அறிக்கை வெளியாகும் வரை, பொறுமையாக காத்திருக்குமாறு, இந்திய விமானிகள் கூட்டமைப்பின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...