200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட Air India விமான விபத்து “கேப்டனின் தற்கொலை” காரணமாக ஏற்பட்டதாக ஒரு விமானப் போக்குவரத்து நிபுணர் நம்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாத விபத்து தொடர்பான விசாரணையில் இருந்து புதிய தகவல்கள், மூத்த விமானி ஒருவர் விமானத்தின் இயந்திரங்களுக்கு எரிபொருள் ஓட்டத்தை கட்டுப்படுத்தும் switchகளை அணைத்துவிட்டதாகக் குறிப்பிடுகின்றன.
ஜூன் 12 அன்று 260 பேரைக் கொன்ற அகமதாபாத் விபத்து தொடர்பான விசாரணையின் மீதான அமெரிக்க அதிகாரிகளின் மதிப்பீட்டில், முன்னணி விமானி Sumeet Sabharwal மீது கவனம் திரும்பியுள்ளதாக Wall Street Journal தெரிவித்துள்ளது.
கருப்புப் பெட்டி (Black Box) கண்டுபிடிப்புகளின் பகுப்பாய்வின்படி, விமானம் 171 ஓடுபாதையில் இருந்து உயர்ந்த சிறிது நேரத்திலேயே கேப்டன் Sabharwal switchகளை “cut-off” நிலைக்கு நகர்த்தியதாக நம்பப்படுகிறது. ஏனெனில் கேப்டனால் மட்டுமே குறித்த switchகளை அணைத்திருக்க முடியும்.
விமானத்தை ஓட்டுவதில் துணை விமானி மும்முரமாக இருந்திருப்பார். விமானத்தை கண்காணிக்கும் மூத்த விமானி மட்டுமே இயந்திர switchகளை நகர்த்தும் திறன் கொண்டவராக இருந்திருப்பார்.
“இது நிச்சயமாக கேப்டனின் தற்கொலை என்று நாங்கள் நினைக்கிறோம்,” என்று Sky News விமானப் போக்குவரத்து நிபுணர் Byron Bailey கூறினார்.
இந்தநிலையில், இறுதி அறிக்கை வெளியாகும் வரை, பொறுமையாக காத்திருக்குமாறு, இந்திய விமானிகள் கூட்டமைப்பின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.