News'கேப்டனின் தற்கொலை' - Air India விபத்து விசாரணை

‘கேப்டனின் தற்கொலை’ – Air India விபத்து விசாரணை

-

200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட Air India விமான விபத்து “கேப்டனின் தற்கொலை” காரணமாக ஏற்பட்டதாக ஒரு விமானப் போக்குவரத்து நிபுணர் நம்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாத விபத்து தொடர்பான விசாரணையில் இருந்து புதிய தகவல்கள், மூத்த விமானி ஒருவர் விமானத்தின் இயந்திரங்களுக்கு எரிபொருள் ஓட்டத்தை கட்டுப்படுத்தும் switchகளை அணைத்துவிட்டதாகக் குறிப்பிடுகின்றன.

ஜூன் 12 அன்று 260 பேரைக் கொன்ற அகமதாபாத் விபத்து தொடர்பான விசாரணையின் மீதான அமெரிக்க அதிகாரிகளின் மதிப்பீட்டில், முன்னணி விமானி Sumeet Sabharwal மீது கவனம் திரும்பியுள்ளதாக Wall Street Journal தெரிவித்துள்ளது.

கருப்புப் பெட்டி (Black Box) கண்டுபிடிப்புகளின் பகுப்பாய்வின்படி, விமானம் 171 ஓடுபாதையில் இருந்து உயர்ந்த சிறிது நேரத்திலேயே கேப்டன் Sabharwal switchகளை “cut-off” நிலைக்கு நகர்த்தியதாக நம்பப்படுகிறது. ஏனெனில் கேப்டனால் மட்டுமே குறித்த switchகளை அணைத்திருக்க முடியும்.

விமானத்தை ஓட்டுவதில் துணை விமானி மும்முரமாக இருந்திருப்பார். விமானத்தை கண்காணிக்கும் மூத்த விமானி மட்டுமே இயந்திர switchகளை நகர்த்தும் திறன் கொண்டவராக இருந்திருப்பார்.

“இது நிச்சயமாக கேப்டனின் தற்கொலை என்று நாங்கள் நினைக்கிறோம்,” என்று Sky News விமானப் போக்குவரத்து நிபுணர் Byron Bailey கூறினார்.

இந்தநிலையில், இறுதி அறிக்கை வெளியாகும் வரை, பொறுமையாக காத்திருக்குமாறு, இந்திய விமானிகள் கூட்டமைப்பின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Latest news

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...

WhatsApp குழுவிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறும் புதிய வசதி

WhatsApp செயலி தற்போது உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக உள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக பயன்படுத்தும் ஒரு செயலியாக...

ஜனவரி 1 முதல் மாறும் கொள்முதல் முறைகள்

2026 ஆம் ஆண்டில் மளிகை மற்றும் எரிபொருள் வணிகங்களுக்கு ஆஸ்திரேலியா பண ஆணையை அறிமுகப்படுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் அறிவித்துள்ளார். அத்தியாவசிய கொள்முதல்களுக்கு பணத்தை ஏற்றுக்கொள்வது...

WhatsApp குழுவிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறும் புதிய வசதி

WhatsApp செயலி தற்போது உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக உள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக பயன்படுத்தும் ஒரு செயலியாக...

ஜனவரி 1 முதல் மாறும் கொள்முதல் முறைகள்

2026 ஆம் ஆண்டில் மளிகை மற்றும் எரிபொருள் வணிகங்களுக்கு ஆஸ்திரேலியா பண ஆணையை அறிமுகப்படுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் அறிவித்துள்ளார். அத்தியாவசிய கொள்முதல்களுக்கு பணத்தை ஏற்றுக்கொள்வது...