Newsமாயமான பொம்மை, மரணமடைந்த அதிகாரி - Annabelle சாபமா?

மாயமான பொம்மை, மரணமடைந்த அதிகாரி – Annabelle சாபமா?

-

Annabelle திரைப்படத்தில் வரும் பேய் பொம்மை மாயமாகியுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளிவந்த நிலையில், குறித்த பொம்மையை ஆய்வு செய்த பிரபல அமானுஷ்ய ஆய்வாளர் Dan Rivera மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Annabelle திகில் படம் உலகம் முழுவதும் பிரபலமானது. அமானுஷ்ய சக்திகள் நிறைந்த Annabelle பொம்மை சுற்றி நடக்கும் திகிலூட்டும் சம்பவங்களின் கலவையே இப்படத்தின் கதை.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் கண்ணாடி பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த Annabelle பொம்மை திடீரென மாயமானதாக சமீபத்தில் இணையத்தில் வதந்திகள் பரவின.

பொதுவாக Warrens Occult அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் இந்த பொம்மை, கடந்த மே மாதம் லூசியானாவில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. இதற்கிடையில் பொம்மை காணாமல் போய்விட்டதாக வதந்தி கிளம்பியது. இதை மறுத்த Dan Rivera, இணையத்தில் வெளியான தகவல் அனைத்தும் பொய்யானது என்று தெளிவுபடுத்தினார்.

ஆனால் அதிர்ச்சியாக, கடந்த ஜூலை 13ஆம் திகதி பென்சில்வேனியாவின் கெட்டிஸ்பர்க்கில் உள்ள ஹோட்டல் அறையில் Dan Rivera உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். விசாரணை அதிகாரிகள் கூறுகையில், “மரணத்தின் காரணம் இன்னும் தெரியவில்லை. சந்தேகத்திற்குரிய எந்த ஆதாரமும் இல்லை. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே உறுதி செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்துக்குப் பிறகு, இணையவாசிகள் “Dan Rivera மரணத்திற்கு Annabelle பொம்மை தொடர்புண்டா?” என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த மரணம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், Annabelle பொம்மை பாதுகாப்பாக இருப்பதாக TikTok வீடியோவையும் வெளியிட்டிருந்தார். மேலும்  ஒக்டோபரில் இல்லினாயில் நடைபெறவிருந்த ஒரு நிகழ்ச்சியில் Annabelle பொம்மை பங்கேற்கும் எனவும் அறிவித்திருந்தார்.

Latest news

வடக்கு குயின்ஸ்லாந்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வடக்கு குயின்ஸ்லாந்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். சனிக்கிழமை காலை 10 மணியளவில் Townsville-இல் உள்ள North Ward-இல் உள்ள Mitchell தெருவில் ஒரு...

ஆஸ்திரேலியாவில் சாதனை அளவை எட்டியுள்ள Influenza வழக்குகள்

சமீபத்திய தேசிய சுகாதார தரவுகளின்படி, குளிர்காலக் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் 431 வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஆஸ்திரேலிய சுவாச கண்காணிப்பு...

பாசி பரவல் தொடர்பாக மாநில அரசிடமிருந்து ஒரு கோரிக்கை

நச்சுப் பாசிகள் பரவுவதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவி வழங்குமாறு தெற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையோரம் கடந்த மார்ச் மாதத்திலிருந்து...

வெளிநாடொன்றில் 20 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து

இஸ்ரேலில் விவசாய வேலைகளில் ஈடுபட்டிருந்த 20 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனைய...

மெல்பேர்ணில் ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் விபத்து – பாதிக்கப்பட்ட போக்குவரத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. Monash தனிவழிப்பாதையில் ஒரு காரும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து...

வெளிநாடொன்றில் 20 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து

இஸ்ரேலில் விவசாய வேலைகளில் ஈடுபட்டிருந்த 20 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனைய...