ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மூன்றாவது நேரடிப் பேச்சுவார்த்தை தொடர் நேற்று இஸ்தான்புல்லில் நடைபெற்றது.
உக்ரைனின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Rustem Umerov மற்றும் ரஷ்ய பிரதிநிதி Vladimir Medinsky ஆகியோர் முக்கிய பங்கேற்பாளர்களாக இருந்தனர்.
போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையின் போது கைதிகள் பரிமாற்றம் குறித்து உடன்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் போர் நிறுத்த விதிமுறைகள் அல்லது ஜனாதிபதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் குறித்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அவர்களின் விவாதமும் ஒரு மணி நேரத்திற்குள் முடிந்தது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா உடன்படவில்லை என்றால், 50 நாட்களுக்குள் அதன் மீது “மிகக் கடுமையான வரிகளை” விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சந்திப்பு நடந்தது.
நேற்றைய சந்திப்பிற்குப் பிறகு, உக்ரைனின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Rustem Umerov, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky-க்கும் Putinக்கும் இடையே ஒரு உச்சிமாநாட்டை முன்மொழிந்ததாகக் கூறினார்.
ஆனால் ரஷ்ய பிரதிநிதி Vladimir Medinsky, அத்தகைய சந்திப்பு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மட்டுமே பொருத்தமானது என்றார்.
உக்ரைன் முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தைக் கோரியது. ஆனால் ரஷ்யா 24 முதல் 48 மணிநேரம் வரையிலான குறுகிய போர்நிறுத்தத்தை மட்டுமே விரும்புவதாக உமெரோவ் கூறினார்.
இறந்த மற்றும் காயமடைந்த வீரர்களை முன் வரிசையில் இருந்து மருத்துவக் குழுக்கள் கொண்டு செல்ல இது அனுமதிக்கும் என்று ரஷ்ய பிரதிநிதி மேலும் கூறினார்.





