179 பேரை பலிகொண்ட தென் கொரிய விமான விபத்துக்கு விமானியின் தவறுதான் காரணம் என்று தெரியவந்துள்ளது.
கடந்த டிசம்பரில் நிகழ்ந்த Jeju விமான விபத்து தொடர்பான விசாரணையின் முதற்கட்ட முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
பறவைகள் மோதியதால் விமானத்தின் இரண்டு என்ஜின்களும் சேதமடைந்த போதிலும், விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு விமானிகள் குறைந்த சேதம் அடைந்த எஞ்சினை செயலிழக்கச் செய்ததாக தெரியவந்துள்ளது.
தென் கொரிய விமானப் போக்குவரத்து மற்றும் ரயில்வே விபத்து விசாரணை வாரியம், விமானத்தின் இயந்திரங்கள் குறித்த தனது விசாரணையின் முடிவுகளை கடந்த வார இறுதியில் வெளியிட திட்டமிட்டிருந்தது.
இருப்பினும், அரசு அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கடும் எதிர்ப்புகள் காரணமாக பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட வேண்டியிருந்தது.
டிசம்பர் 29 ஆம் திகதி முவான் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது, போயிங் 737-800 விமானம் தரையிறங்கும் கியரை இழந்து ஓடுபாதையில் இருந்து சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானத்தில் இருந்த 179 பேர் இறந்தனர், இரண்டு பேர் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.