Kambalda-ஐ சேர்ந்த Rick Bell என்ற 72 வயதான நபர் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து விரைவாக மருத்துவமனைக்கு சென்றதால் உயிர் தப்பிய அனுபவம் குறித்து ஊடங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்றவரும் பகுதிநேர ஆய்வாளராகப் பணியாற்றியவருமான Rick Bell, கடந்த மார்ச் 10ம் திகதி மூச்சுத் திணறல் மற்றும் மார்பு வலி ஏற்பட்ட பிறகு Kambaldaவில் உள்ள St John General Practice clinic-இற்கு வந்தார்.
Rick Bell ஒரு தன்னார்வ ஆம்புலன்ஸ் உதவியாளராக இருந்ததால், தனக்கு ஏற்பட்ட அரிகுறிகள் மாரடைப்புக்கானவை என புரிந்துகொண்டார். அதனால் அவர் காரில் ஏறி, மருத்துவமனைக்கு போன் செய்து, ‘எனக்கு மாரடைப்பு ஏற்படுவது உறுதியாகிவிட்டது, நான் போய்க்கொண்டிருக்கிறேன்’ என்று மருத்துவமனைக்குச் கூறினார்.
மருத்துவமனைக்கு வந்த சில நிமிடங்களில், திரு. Bell மருத்துவ ஊழியர்களால் கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
தன்னார்வ ஆம்புலன்ஸ் அதிகாரிகளும் சமூக துணை மருத்துவரும் வரும் வரை, மற்ற மருத்துவ நிபுணர்களும் தன்னார்வலர்களும் திரு.Bell-இற்கு இதய நுரையீரல் புத்துயிர் அளிக்க உதவியதுடன், மருத்துவர் பழனியப்பா சுரேஷ் சுமார் எட்டு நிமிடங்கள் அவருக்கு இதய நுரையீரல் புத்துயிர் அளித்தார்.
பின்னர் திரு.Bell Kalgoorlie Health Campus-இன் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து பெர்த்திற்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் கழித்து quadruple bypass அறுவை சிகிச்சை செய்து மீண்டார்.
திரு.Bell-இன் உயிரைக் காப்பாற்ற உதவிய முதல் மீட்புக் குழுவினர், அவர்களின் குழுப்பணி மற்றும் தொழில்முறைக்காக அங்கீகரிக்கப்பட்டு, St John WA பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர்.
ஊழியர்களுக்கு, குறிப்பாக டாக்டர் சுரேஷுக்கு, தான் “மிகவும் நன்றியுள்ளவனாக” இருப்பதாக அவர் கூறினார், அவர்களுக்கு அவர் திறந்த கரங்களுடன் நன்றி தெரிவித்தார் திரு.Bell.