Perthபெர்த்தில் மாரடைப்பு ஏற்பட்ட நபரை உடனெடியாக காப்பாற்றிய தமிழ் மருத்துவர் பழனியப்பா...

பெர்த்தில் மாரடைப்பு ஏற்பட்ட நபரை உடனெடியாக காப்பாற்றிய தமிழ் மருத்துவர் பழனியப்பா சுரேஷ்

-

Kambalda-ஐ சேர்ந்த Rick Bell என்ற 72 வயதான நபர் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து விரைவாக மருத்துவமனைக்கு சென்றதால் உயிர் தப்பிய அனுபவம் குறித்து ஊடங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்றவரும் பகுதிநேர ஆய்வாளராகப் பணியாற்றியவருமான Rick Bell, கடந்த மார்ச் 10ம் திகதி மூச்சுத் திணறல் மற்றும் மார்பு வலி ஏற்பட்ட பிறகு Kambaldaவில் உள்ள  St John General Practice clinic-இற்கு வந்தார்.

Rick Bell ஒரு தன்னார்வ ஆம்புலன்ஸ் உதவியாளராக இருந்ததால், தனக்கு ஏற்பட்ட அரிகுறிகள் மாரடைப்புக்கானவை என புரிந்துகொண்டார். அதனால் அவர் காரில் ஏறி, மருத்துவமனைக்கு போன் செய்து, ‘எனக்கு மாரடைப்பு ஏற்படுவது உறுதியாகிவிட்டது, நான் போய்க்கொண்டிருக்கிறேன்’ என்று மருத்துவமனைக்குச் கூறினார்.

மருத்துவமனைக்கு வந்த சில நிமிடங்களில், திரு. Bell மருத்துவ ஊழியர்களால் கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

தன்னார்வ ஆம்புலன்ஸ் அதிகாரிகளும் சமூக துணை மருத்துவரும் வரும் வரை, மற்ற மருத்துவ நிபுணர்களும் தன்னார்வலர்களும் திரு.Bell-இற்கு இதய நுரையீரல் புத்துயிர் அளிக்க உதவியதுடன், மருத்துவர் பழனியப்பா சுரேஷ் சுமார் எட்டு நிமிடங்கள் அவருக்கு இதய நுரையீரல் புத்துயிர் அளித்தார்.

பின்னர் திரு.Bell Kalgoorlie Health Campus-இன் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து பெர்த்திற்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் கழித்து quadruple bypass அறுவை சிகிச்சை செய்து மீண்டார்.

திரு.Bell-இன் உயிரைக் காப்பாற்ற உதவிய முதல் மீட்புக் குழுவினர், அவர்களின் குழுப்பணி மற்றும் தொழில்முறைக்காக அங்கீகரிக்கப்பட்டு, St John WA பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர்.

ஊழியர்களுக்கு, குறிப்பாக டாக்டர் சுரேஷுக்கு, தான் “மிகவும் நன்றியுள்ளவனாக” இருப்பதாக அவர் கூறினார், அவர்களுக்கு அவர் திறந்த கரங்களுடன் நன்றி தெரிவித்தார் திரு.Bell.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...