Newsதாய்லாந்து பயணம் செய்வது குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

தாய்லாந்து பயணம் செய்வது குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

-

தாய்லாந்தின் பல பகுதிகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையிலான எல்லை மோதல்கள் அதிகரித்து வருவதால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் Smartraveller சேவை, Chanthaburi மற்றும் Trat மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறது.

அந்தப் பகுதிகளில் இராணுவச் சட்டம் அமலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கம்போடிய எல்லையைத் தாண்டி Buriram, Si Saket, Surin மற்றும் Ubon Ratchathani மாகாணங்களுக்குள் நுழைவதைத் தவிர்க்கவும் முன்னதாகவே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.

கம்போடியாவின் எல்லை மாகாணங்களான Preah Vihear மற்றும் Oddar Meanchey ஆகியவற்றிற்கு பயணம் செய்வதற்கு எதிராகவும் Smartraveller சேவை அறிவுறுத்துகிறது.

இந்தப் பகுதிகள் இராணுவத் தாக்குதல்கள், வன்முறை மற்றும் கண்ணிவெடிகள் ஏற்படும் அபாயத்தில் உள்ளன. மேலும் பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

அந்தப் பகுதியில் உள்ள எல்லைக் கடவைகளும் மூடப்பட்டுள்ளன.

இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்றது, அங்கு அனைத்து உறுப்பு நாடுகளும் போரை நிறுத்துமாறு இரு தரப்பினரையும் கேட்டுக்கொண்டன.

Latest news

ஒரு வருடத்தில் பிரித்தானிய நாட்டிற்குள் பிரவேசித்த 43000 அகதிகள்

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இந்த ஆண்டு (2025) ஒக்டோபர் 31 ஆம் திகதிவரையான காலத்தில் சுமார் 43...

குழந்தைப் பருவப் புற்றுநோய்க்கு விக்டோரியா அரசு பாரிய ஆதரவு

குழந்தைப் பருவப் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புதிய சிகிச்சைகளுக்கு நிதி உதவி வழங்க விக்டோரியன் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குழந்தை புற்றுநோய் சிகிச்சைத் துறையில் புதிய...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் பணவீக்கம் – அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் அதிகப்படியான செலவு பணவீக்கத்திற்கு பங்களித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. நிதியமைச்சர் Jim Chalmers மீது இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தின் அதிகப்படியான...

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் திருடப்படும் ஒரு துப்பாக்கி

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு துப்பாக்கி திருடப்படுவதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. இது குற்றவாளிகள் துப்பாக்கிகளைப் பெறுவதற்கான எளிமையை அதிகரிக்கும் என்று நிபுணர்கள்...

பெர்த்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய செல்லப்பிராணி சட்டம் – மீறினால் $300 அபராதம்

பெர்த்தில் உள்ள Melville நகர சபை வீட்டுப் பூனைகள் குறித்து சர்ச்சைக்குரிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஒரு வீட்டில் இரண்டு பூனைகளை மட்டுமே வளர்க்க முடியும். மேலும்...

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கும் Bulk-Billing ஏற்பாடு

ஆஸ்திரேலியாவின் புதிய Bulk-Billing (முழு அரசாங்க நிதியுதவி சிகிச்சை) திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ ஒரு மருத்துவரைப்...