Newsதாய்லாந்து பயணம் செய்வது குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

தாய்லாந்து பயணம் செய்வது குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

-

தாய்லாந்தின் பல பகுதிகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையிலான எல்லை மோதல்கள் அதிகரித்து வருவதால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் Smartraveller சேவை, Chanthaburi மற்றும் Trat மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறது.

அந்தப் பகுதிகளில் இராணுவச் சட்டம் அமலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கம்போடிய எல்லையைத் தாண்டி Buriram, Si Saket, Surin மற்றும் Ubon Ratchathani மாகாணங்களுக்குள் நுழைவதைத் தவிர்க்கவும் முன்னதாகவே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.

கம்போடியாவின் எல்லை மாகாணங்களான Preah Vihear மற்றும் Oddar Meanchey ஆகியவற்றிற்கு பயணம் செய்வதற்கு எதிராகவும் Smartraveller சேவை அறிவுறுத்துகிறது.

இந்தப் பகுதிகள் இராணுவத் தாக்குதல்கள், வன்முறை மற்றும் கண்ணிவெடிகள் ஏற்படும் அபாயத்தில் உள்ளன. மேலும் பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

அந்தப் பகுதியில் உள்ள எல்லைக் கடவைகளும் மூடப்பட்டுள்ளன.

இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்றது, அங்கு அனைத்து உறுப்பு நாடுகளும் போரை நிறுத்துமாறு இரு தரப்பினரையும் கேட்டுக்கொண்டன.

Latest news

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி, தோஷாகானா வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள விக்டோரியன் பிரதமர் 

கடந்த சில நாட்களாக விக்டோரியாவின் Mordialloc கடலோரப் பகுதியில் இளைஞர்கள் குழுவின் கலவர நடத்தை பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

கிறிஸ்துமஸுக்கு முன்பு எரிபொருள் விலை எப்படி உயரும்?

கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு, குயின்ஸ்லாந்து முழுவதும் பெட்ரோல் விலை திடீரென அதிகரித்துள்ளது. இந்த பண்டிகை காலத்தில் இந்த அதிகரிப்பு "மிகவும் நியாயமற்றது மற்றும் எதிர்பாராதது" என்று...