Newsகாஸாவில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

காஸாவில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

-

காஸா பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விமானம் மூலம் விநியோகிக்க இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ், விமானங்களிலிருந்து பரிசூட் மூலம் நிவாரணப் பெட்டிகள் கீழே விடப்படும் காட்சிகளை இஸ்ரேல் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

பலஸ்தீன பகுதிகளில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகளை தணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், காஸாவுக்கு மீண்டும் விமான உதவித் திட்டங்களை தொடங்கியுள்ளதாகவும் இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் இயக்கத்துடன் தொடர்ந்து மோதல்களில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல், சமீபகாலமாக காஸாவுக்கான அனைத்து நிவாரணப் பொருட்களின் அனுப்புதலையும் நிறுத்தியிருந்தது. இதன் விளைவாக, சுமார் 20 இட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தீவிரமான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு, தற்போது மீண்டும் உணவு மற்றும் அவசர நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும், விநியோக மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நேரடியாக உதவி வழங்கப்படும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், காஸா மக்களின் நிலையை சிறிதளவாவது சீரமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...