சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாகவும் இதனால் சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதையடுத்து குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறதாகவும் குழந்தை பிறப்பை அதிகரிக்க பல சலுகைகளை அறிவித்திருந்தும் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேலும் ஒரு திட்டத்தை சீன அரசு அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதியில் இருந்து பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் மானியம் வழங்கப்படும் என சீன அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் இந்த நிதி குழந்தையின் 3 வயது வரை வழங்கப்படும்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2022 மற்றும் 2024ம் ஆண்டுக்கு இடையில் பிறந்த குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் பகுதியளவு நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.