Newsஇந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 25 % வரியை அறிவித்த ட்ரம்ப்

இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 25 % வரியை அறிவித்த ட்ரம்ப்

-

2025 ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிகளுக்கு 25% வரி அறவிடப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

யுக்ரைன் மோதலுக்கு மத்தியில் இந்தியா, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் இராணுவ கொள்முதல்களில் ஈடுபடுவதை மையப்படுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

நட்பு நாடுகளாக இருந்தாலும், இந்தியாவின் அதிக வரிகள் உட்பட்ட விடயங்களால், இந்தியாவும் அமெரிக்காவும் மட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக தொடர்புகளைக் கொண்டுள்ளன என்று டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா தங்களின் நட்பு நாடாக இருந்தாலும், பல ஆண்டுகளாக இந்தியாவுடன், அமெரிக்கா ஒப்பீட்டளவில் சிறிய வியாபாரத்தையே மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளன.

அத்துடன், அவை எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையான நாணயமற்ற வர்த்தக தடைகளைக் கொண்டுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா வரலாற்று ரீதியாக ரஷ்யாவிலிருந்து பெரும்பாலான இராணுவ உபகரணங்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி கொள்வனவு செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், ரஷ்யா யுக்ரைனில் கொலை செய்வதை நிறுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்பும் நேரத்தில் ஆகஸ்ட் முதல் இந்தியா 25% வரியை செலுத்தும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...