Newsஇந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 25 % வரியை அறிவித்த ட்ரம்ப்

இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 25 % வரியை அறிவித்த ட்ரம்ப்

-

2025 ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிகளுக்கு 25% வரி அறவிடப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

யுக்ரைன் மோதலுக்கு மத்தியில் இந்தியா, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் இராணுவ கொள்முதல்களில் ஈடுபடுவதை மையப்படுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

நட்பு நாடுகளாக இருந்தாலும், இந்தியாவின் அதிக வரிகள் உட்பட்ட விடயங்களால், இந்தியாவும் அமெரிக்காவும் மட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக தொடர்புகளைக் கொண்டுள்ளன என்று டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா தங்களின் நட்பு நாடாக இருந்தாலும், பல ஆண்டுகளாக இந்தியாவுடன், அமெரிக்கா ஒப்பீட்டளவில் சிறிய வியாபாரத்தையே மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளன.

அத்துடன், அவை எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையான நாணயமற்ற வர்த்தக தடைகளைக் கொண்டுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா வரலாற்று ரீதியாக ரஷ்யாவிலிருந்து பெரும்பாலான இராணுவ உபகரணங்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி கொள்வனவு செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், ரஷ்யா யுக்ரைனில் கொலை செய்வதை நிறுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்பும் நேரத்தில் ஆகஸ்ட் முதல் இந்தியா 25% வரியை செலுத்தும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...