Newsஇந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 25 % வரியை அறிவித்த ட்ரம்ப்

இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 25 % வரியை அறிவித்த ட்ரம்ப்

-

2025 ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிகளுக்கு 25% வரி அறவிடப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

யுக்ரைன் மோதலுக்கு மத்தியில் இந்தியா, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் இராணுவ கொள்முதல்களில் ஈடுபடுவதை மையப்படுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

நட்பு நாடுகளாக இருந்தாலும், இந்தியாவின் அதிக வரிகள் உட்பட்ட விடயங்களால், இந்தியாவும் அமெரிக்காவும் மட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக தொடர்புகளைக் கொண்டுள்ளன என்று டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா தங்களின் நட்பு நாடாக இருந்தாலும், பல ஆண்டுகளாக இந்தியாவுடன், அமெரிக்கா ஒப்பீட்டளவில் சிறிய வியாபாரத்தையே மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளன.

அத்துடன், அவை எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையான நாணயமற்ற வர்த்தக தடைகளைக் கொண்டுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா வரலாற்று ரீதியாக ரஷ்யாவிலிருந்து பெரும்பாலான இராணுவ உபகரணங்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி கொள்வனவு செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், ரஷ்யா யுக்ரைனில் கொலை செய்வதை நிறுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்பும் நேரத்தில் ஆகஸ்ட் முதல் இந்தியா 25% வரியை செலுத்தும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Latest news

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

பெர்த்தில்  நாஜி சின்னத்தை காட்சிப்படுத்திய 18 வயது நபர் மீது குற்றம்

பெர்த்தின் தென்கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் நாஜி சின்னம் அணிந்திருந்ததாகக் கூறப்படும் 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்து குற்றம்...

NSWவில் வாகனம் மோதி இறந்த பெண் – ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சனிக்கிழமை இரவு Maroochydore-இல் வேண்டுமென்றே வாகனத்தை மோதிவிட்டு ஓடியதாகக் கூறப்படும் விபத்தில் நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Guilherme Dal...