NoticesTamil Community Eventsஅக்சயன் மணிவண்ணன் எழுதிய "Tamil Saiva Poetry" நூல் வெளியீட்டு விழா

அக்சயன் மணிவண்ணன் எழுதிய “Tamil Saiva Poetry” நூல் வெளியீட்டு விழா

-

அக்சயன் மணிவண்ணன் எழுதிய “Tamil Saiva Poetry” நூல் வெளியீட்டு விழா மெல்பேர்ணில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏறக்குறைய 300 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஒரு வழக்கமான புத்தக வெளியீடு போலன்றி ஒரு தெய்வீகமான மனநிலையில் எல்லோரும் அமர்ந்திருந்தார்கள். பார்வையாளர்கள் கைத்தொலைபேசியை இரண்டு மணித்துளிகள் சுத்தமாக மறந்து மேடையையே வைத்த விழி மாறாது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“நூலுக்கு அணிந்துரை வழங்கியதுடன் தலைமை உரையாற்றவும் கிட்டிய வாய்ப்பு மிக அருமையான அனுபவம்” என்று பேராசிரியர் கலாநிதி சந்திரிக்கா சுப்ரமணியம் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

அடுத்து அக்சயன் மணிவண்ணன் ஏற்புரை வழங்கியபோது பலர் மெய்மறந்து உள்ளம் உருகி கண்ணீர் மல்க அமர்ந்து திருவாசகத் தேனைப் பருகினார்கள்.

இறுதியாக “முத்தைத்தரு பத்தித் திருநகை” உள்ளிட்ட ஐந்து திருப்புகழ் இசையை அக்சயன் வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தபோது இன்னும் சிறிது பாட மாட்டாரா என்று பலர் கேட்டார்கள்.

ஆஸ்திரேலிய நாட்டில் பிறந்து வளர்ந்த அட்சயன், நாயன்மார்களையும் அருணகிரிநாதனையும் படித்து உள்வாங்கி அதை மிகச் சிறப்பான ஒரு ஆங்கில நூலாக உருவாக்கி வெளியிட்டது பாராட்டுக்குரியது.

Latest news

600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் காலமானார்

உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த மெக்சிக்கோவைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மெக்சிக்கோ வைத்தியசாலையில் கடுமையான...

39 நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ள அமெரிக்கா

ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில், 39 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் புதிய அறிவிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். டிசம்பர்...

குயின்ஸ்லாந்தில் சுரங்க விபத்து – தொழிலாளியைக் காணவில்லை

குயின்ஸ்லாந்தின் Blackwater-இல் உள்ள Curragh நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு தொழிலாளி காணாமல் போயுள்ளார். சுரங்கச் சுவர் இடிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. விபத்து...

இஸ்ரேலில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போலீஸ் பயிற்சி

Bondi கடற்கரையில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதம் மற்றும் யூத-விரோதத்தை எதிர்த்துப் போராட மூத்த ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்க இஸ்ரேல்...

இஸ்ரேலில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போலீஸ் பயிற்சி

Bondi கடற்கரையில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதம் மற்றும் யூத-விரோதத்தை எதிர்த்துப் போராட மூத்த ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்க இஸ்ரேல்...

விக்டோரியாவில் புதிய பொதுப் போக்குவரத்து விதிகள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், விக்டோரியாவின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும். மாநிலம் முழுவதும் 18 வயதுக்குட்பட்ட...