NoticesTamil Community Eventsஅக்சயன் மணிவண்ணன் எழுதிய "Tamil Saiva Poetry" நூல் வெளியீட்டு விழா

அக்சயன் மணிவண்ணன் எழுதிய “Tamil Saiva Poetry” நூல் வெளியீட்டு விழா

-

அக்சயன் மணிவண்ணன் எழுதிய “Tamil Saiva Poetry” நூல் வெளியீட்டு விழா மெல்பேர்ணில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏறக்குறைய 300 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஒரு வழக்கமான புத்தக வெளியீடு போலன்றி ஒரு தெய்வீகமான மனநிலையில் எல்லோரும் அமர்ந்திருந்தார்கள். பார்வையாளர்கள் கைத்தொலைபேசியை இரண்டு மணித்துளிகள் சுத்தமாக மறந்து மேடையையே வைத்த விழி மாறாது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“நூலுக்கு அணிந்துரை வழங்கியதுடன் தலைமை உரையாற்றவும் கிட்டிய வாய்ப்பு மிக அருமையான அனுபவம்” என்று பேராசிரியர் கலாநிதி சந்திரிக்கா சுப்ரமணியம் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

அடுத்து அக்சயன் மணிவண்ணன் ஏற்புரை வழங்கியபோது பலர் மெய்மறந்து உள்ளம் உருகி கண்ணீர் மல்க அமர்ந்து திருவாசகத் தேனைப் பருகினார்கள்.

இறுதியாக “முத்தைத்தரு பத்தித் திருநகை” உள்ளிட்ட ஐந்து திருப்புகழ் இசையை அக்சயன் வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தபோது இன்னும் சிறிது பாட மாட்டாரா என்று பலர் கேட்டார்கள்.

ஆஸ்திரேலிய நாட்டில் பிறந்து வளர்ந்த அட்சயன், நாயன்மார்களையும் அருணகிரிநாதனையும் படித்து உள்வாங்கி அதை மிகச் சிறப்பான ஒரு ஆங்கில நூலாக உருவாக்கி வெளியிட்டது பாராட்டுக்குரியது.

Latest news

ஒரு வருடத்தில் பிரித்தானிய நாட்டிற்குள் பிரவேசித்த 43000 அகதிகள்

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இந்த ஆண்டு (2025) ஒக்டோபர் 31 ஆம் திகதிவரையான காலத்தில் சுமார் 43...

குழந்தைப் பருவப் புற்றுநோய்க்கு விக்டோரியா அரசு பாரிய ஆதரவு

குழந்தைப் பருவப் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புதிய சிகிச்சைகளுக்கு நிதி உதவி வழங்க விக்டோரியன் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குழந்தை புற்றுநோய் சிகிச்சைத் துறையில் புதிய...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் பணவீக்கம் – அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் அதிகப்படியான செலவு பணவீக்கத்திற்கு பங்களித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. நிதியமைச்சர் Jim Chalmers மீது இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தின் அதிகப்படியான...

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் திருடப்படும் ஒரு துப்பாக்கி

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு துப்பாக்கி திருடப்படுவதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. இது குற்றவாளிகள் துப்பாக்கிகளைப் பெறுவதற்கான எளிமையை அதிகரிக்கும் என்று நிபுணர்கள்...

பெர்த்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய செல்லப்பிராணி சட்டம் – மீறினால் $300 அபராதம்

பெர்த்தில் உள்ள Melville நகர சபை வீட்டுப் பூனைகள் குறித்து சர்ச்சைக்குரிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஒரு வீட்டில் இரண்டு பூனைகளை மட்டுமே வளர்க்க முடியும். மேலும்...

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கும் Bulk-Billing ஏற்பாடு

ஆஸ்திரேலியாவின் புதிய Bulk-Billing (முழு அரசாங்க நிதியுதவி சிகிச்சை) திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ ஒரு மருத்துவரைப்...