Newsகாசாவில் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சம்மதம்

காசாவில் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சம்மதம்

-

காசா பகுதியில் போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலுடன் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக பாலஸ்தீன ஆயுதக் குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எகிப்து மற்றும் கத்தார் சமர்ப்பித்த இந்த முன்மொழிவு, ஜூன் மாதம் அமெரிக்க பிரதிநிதி Steve Witkoff முன்வைத்த கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டதாக கூறப்படுகிறது.

ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 20 இஸ்ரேலிய பணயக்கைதிகள், 60 நாள் ஆரம்ப போர் நிறுத்தத்தின் போது இரண்டு குழுக்களாக விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் காலகட்டத்தில் நிரந்தர போர்நிறுத்தம் குறித்த விவாதங்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இருப்பினும், இதற்கு இஸ்ரேலின் பதில் இன்னும் தெளிவாகக் கூறப்படவில்லை.

அனைத்து பணயக்கைதிகளும் ஒரே நேரத்தில் விடுவிக்கப்பட்டால் மட்டுமே ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் சமீபத்தில் கூறியது.

இதற்கிடையில், 22 மாத காலப் போர் ஒரு திருப்புமுனையில் இருப்பதாகவும், காசா நகரில் ஹமாஸுக்கு எதிரான தாக்குதல்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படுவதாகவும் இஸ்ரேலிய இராணுவத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் Eyal Zamir கூறியுள்ளார்.

இந்த வார இறுதியில் காசா நகரைக் கைப்பற்றும் இராணுவத் திட்டத்திற்கு இஸ்ரேலிய அமைச்சரவையும் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

பிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம்

“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’ அந்நாட்டு அரசாங்கம் நேற்று (22) அறிவித்துள்ளது. இதன்படி, நாய்களைக் கொடூரமான முறையில் இனப்பெருக்கம் செய்யும்...

ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி Bondi கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு துப்பாக்கிப் பயன்பாடு மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அவசரமாக...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...

Bondi தாக்குதலுக்குப் பிறகு அல்பானீஸ் வெளியிட்டுள்ள புதிய விதிகள்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்பு, பிரிவினை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக...

மெல்பேர்ணில் கார் திருட்டில் ஈடுபட்ட இரு சிறுமிகள்

மெல்பேர்ணில் கார் திருட்டு தொடர்பாக இரண்டு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் பிரஸ்டனில் உள்ள பெல் தெருவில் திருடப்பட்ட நீல நிற டொயோட்டா...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...