Newsத.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

த.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

-

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது.

மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின் மூன்று நிர்வாகிகள் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது குடும்பத்திற்கு கட்சி துணை நிற்கும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

இம்மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மதுரையில் திரண்டனர், மாநாடு மாலையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதிகாலை முதலே ஏராளமானோர் அங்கு குவிய தொடங்கினர்.

கடுமையான வெயிலில் அமர்வதற்கு நிழல் வசதி கூட இல்லாததால் மாநாட்டுக்கு வந்த ஏராளமான தொண்டர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

தொடர்ந்து அவர்கள் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் மாநாட்டுக்கு வந்த சில தொண்டர்கள் கடுமையான உடல் நலக்குறைவுக்கு ஆட்பட்டனர்.

மேலும் செங்கல்பட்டையைச் சேர்ந்த பிரபாகரன், நீலகிரியைச் சேர்ந்த ரித்திக் ரோஷன், விருதுநகரை சேர்ந்த காளிராஜன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தவெக மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் நிர்வாகிகள் 3 பேர் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த நிலையில், அவர்களின் மரணத்துக்கு நடிகரும் தவெக தலைவருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Latest news

ஆடம்பர ஹோட்டல் போல தோற்றமளிக்கும் குயின்ஸ்லாந்து சிறை அறை

குயின்ஸ்லாந்தின் புதிய மற்றும் மிகப்பெரிய அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையான Lockyer பள்ளத்தாக்கு சீர்திருத்த மையம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த சிறைச்சாலைக்கு $965.2 மில்லியன் செலவிடப்பட்டதாகவும், இதில் 1,500...

சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்த இணையும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள்

Utta பல்கலைக்கழகத்தில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க பழமைவாத வர்ணனையாளர் சார்லி கிர்க்கிற்கு மெழுகுவர்த்திகளை ஏற்றி இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இது சார்லி கிர்க்கின்...

“வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு” – த.வெ.க. தலைவர் விஜய்

‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய் கேள்வி...

நேபாளத்தில் முதல் பெண் பிரதமர் ஒருவர் பதவி ஏற்பு

இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார்....

சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்த இணையும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள்

Utta பல்கலைக்கழகத்தில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க பழமைவாத வர்ணனையாளர் சார்லி கிர்க்கிற்கு மெழுகுவர்த்திகளை ஏற்றி இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இது சார்லி கிர்க்கின்...

“வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு” – த.வெ.க. தலைவர் விஜய்

‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய் கேள்வி...