Newsத.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

த.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

-

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது.

மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின் மூன்று நிர்வாகிகள் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது குடும்பத்திற்கு கட்சி துணை நிற்கும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

இம்மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மதுரையில் திரண்டனர், மாநாடு மாலையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதிகாலை முதலே ஏராளமானோர் அங்கு குவிய தொடங்கினர்.

கடுமையான வெயிலில் அமர்வதற்கு நிழல் வசதி கூட இல்லாததால் மாநாட்டுக்கு வந்த ஏராளமான தொண்டர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

தொடர்ந்து அவர்கள் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் மாநாட்டுக்கு வந்த சில தொண்டர்கள் கடுமையான உடல் நலக்குறைவுக்கு ஆட்பட்டனர்.

மேலும் செங்கல்பட்டையைச் சேர்ந்த பிரபாகரன், நீலகிரியைச் சேர்ந்த ரித்திக் ரோஷன், விருதுநகரை சேர்ந்த காளிராஜன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தவெக மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் நிர்வாகிகள் 3 பேர் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த நிலையில், அவர்களின் மரணத்துக்கு நடிகரும் தவெக தலைவருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...