Breaking Newsஅமெரிக்காவில் ஒரு பள்ளியில் துப்பாக்கிச்சூடு - இரு குழந்தைகள் பலி -...

அமெரிக்காவில் ஒரு பள்ளியில் துப்பாக்கிச்சூடு – இரு குழந்தைகள் பலி – 17 பேர் காயம்

-

அமெரிக்காவின் Minneapolis மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியின் தேவாலய வழிபாட்டில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

கோடை விடுமுறையிலிருந்து திரும்பியதிலிருந்து பள்ளி தொடங்கிய மூன்றாவது நாளில், Annunciation Catholic பள்ளியில் குழந்தைகள் இருக்கைகளில் அமர்ந்திருந்தபோது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது.

துப்பாக்கிதாரி, பின்னர் தேவாலயத்திற்குள் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

பலியான இருவரும் 8 மற்றும் 10 வயதுடையவர்கள். மேலும் 17 பேர் காயமடைந்தனர், அவர்களில் 14 பேர் குழந்தைகள். காயமடைந்த குழந்தைகளில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த துயர சம்பவம் தொடர்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உட்பல பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...