ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்கா, ஸ்வீடன், பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகள் இப்போது IRGC-ஐ ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.
ஆஸ்திரேலியாவில் நடந்த இரண்டு யூத எதிர்ப்பு தாக்குதல்களுக்குப் பின்னால் ஈரான் இருப்பதாக ASIO உளவுத்துறை நேற்று வெளிப்படுத்தியது.
இதன் விளைவாக, ஆஸ்திரேலிய அரசாங்கம் ஈரானுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டிக்க நடவடிக்கை எடுத்தது.
மெல்பேர்ண் ஜெப ஆலயம் மற்றும் சிட்னியில் உள்ள Lewis’ Continental மீதான தாக்குதல் ஈரானின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டதாக ASIO இயக்குநர் ஜெனரல் Mike Burgess தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கான ஈரானிய தூதர் மற்றும் மூன்று அதிகாரிகளும் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல்கள் “ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு வெளிநாட்டு தேசத்தால் திட்டமிடப்பட்ட அசாதாரணமான மற்றும் ஆபத்தான ஆக்கிரமிப்பு செயல்கள்” என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறியுள்ளார்.
நாட்டின் சமூக ஒற்றுமை மீதான தாக்குதல் ஆஸ்திரேலியா மீதான தாக்குதலுக்குச் சமம் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், IRGC-யை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பது ஒரு “சிக்கலான மற்றும் முக்கியமான” நடவடிக்கை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.