தென் சீனக் கடலில் நடைபெறும் கடற்படைப் பயிற்சியில் ஆஸ்திரேலிய போர்க்கப்பல் ஒன்று இணைந்துள்ளது.
ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை வான் அச்சுறுத்தல்களுக்கு எதிரான கூட்டுப் பயிற்சிகளுக்காக ஸ்கார்பரோ ஷோல் பகுதிக்கு மூன்று போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.
மணிலா விமானங்கள் மற்றும் கப்பல்களை விரட்ட சீனப் படைகள் ஆபத்தான முறைகளைப் பயன்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டது.
இது வான்வழி அச்சுறுத்தல்களுக்குப் பாதுகாப்பாக பதிலளிக்கும் திறனைப் பயிற்றுவிக்க உதவியதாக பிலிப்பைன்ஸ் இராணுவம் கூறுகிறது.
ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதி இது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தென் சீனக் கடலில் உள்ள ஸ்கார்பரோ ஷோல் பகுதி பல ஆண்டுகளாக சீன கடற்படையால் பெரிதும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்து வருகிறது.
இந்த கடல் பாதையின் உரிமை குறித்து பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனே மற்றும் தைவான் ஆகிய நாடுகளும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ள நிலையில், சீனா முழுப் பகுதியையும் தனது பிரதேசமாகக் கூறுகிறது.