16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு Energy பானங்களை தடை செய்ய இங்கிலாந்து தயாராகி வருகிறது.
அதிக அளவு காஃபின் கொண்ட பானங்களால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் தீங்கைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டம் கடைகள், உணவகங்கள், கஃபேக்கள், Vending machines மற்றும் ஆன்லைனில் பானங்கள் வாங்குவதைத் தடை செய்யும்.
சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கைகள், சில Energy பானங்களில் இரண்டு கப் காபியை விட அதிக காஃபின் இருப்பதாகவும், அவை குழந்தைகளுக்கு தூக்கம் மற்றும் நடத்தை பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிடுகின்றன.
ஒரு நாளைக்கு 100,000 குழந்தைகள் குறைந்தது ஒரு காஃபின் கலந்த Energy பானத்தையாவது உட்கொள்வதாக ஆராய்ச்சி காட்டுவதாக இங்கிலாந்து அரசு கூறுகிறது.
13 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு வரையிலும், 11 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கால் பகுதியினர் ஒவ்வொரு வாரமும் இந்த பானங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைக் குடிக்கிறார்கள்.
முன்மொழியப்பட்ட புதிய சட்டம், Diet Coke, தேநீர் மற்றும் காபி போன்ற குறைந்த காஃபின் கொண்ட குளிர்பானங்களின் விற்பனையைப் பாதிக்காது என்று கூறப்படுகிறது.