Melbourneமெல்பேர்ணுக்கு 500,000 புதிய மரங்கள்

மெல்பேர்ணுக்கு 500,000 புதிய மரங்கள்

-

மெல்பேர்ணை பசுமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரமாக மாற்ற விக்டோரியன் அரசாங்கம் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.

மெல்பேர்ண் முழுவதும் 500,000 புதிய மரங்களை நடுவதற்கு 9.5 மில்லியன் டாலர்கள் செலவாகும்.

Ardeer South தொடக்கப்பள்ளியில் நடந்த ஒரு பயிலரங்கு ஒன்றில் சுற்றுச்சூழல் அமைச்சர் Steve Dimopoulos மற்றும் திட்டமிடல் அமைச்சர் Sonya Kilkenny ஆகியோர் புதிய முயற்சிகளை அறிவித்தனர்.

காற்றின் தரத்தை மேம்படுத்துதல், அதிக நிழலை உருவாக்குதல் மற்றும் சுற்றுச்சூழலை குளிர்வித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, Ardeer South தொடக்கப்பள்ளி ஏற்கனவே 1,800க்கும் மேற்பட்ட மரங்களை நடுவதில் பங்களித்துள்ளது.

இந்தத் திட்டம் மெல்பேர்ணில் மேலும் மரங்கள் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது. மேலும் மரங்கள் குறைவாகவும் அதிக வெப்பநிலையுடனும் உள்ள பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் Steve Dimopoulos தெரிவித்தார்.

இன்று முதல் மாநிலம் முழுவதும் உள்ள மரங்களுக்கு வலுவான பாதுகாப்பு செயல்படுத்தப்படும் என்றும், குடியிருப்பு நிலங்களில் 5 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள மரங்களை அகற்ற அனுமதி பெற வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

மெல்பேர்ணில் மேலும் மரங்கள் திட்டம் உள்ளூர் அரசாங்கங்கள் மற்றும் நில மேலாளர்களுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. அவர்கள் அடுத்த ஆண்டு பெரிய நிதிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...