Breaking News2050ம் ஆண்டுக்குள் கடலில் மூழ்கும் ஆஸ்திரேலியா

2050ம் ஆண்டுக்குள் கடலில் மூழ்கும் ஆஸ்திரேலியா

-

ஆஸ்திரேலியாவுக்கு காலநிலை தொடர்பான மிகப்பெரிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் பருவநிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் உயர்வதால் எதிர்வரும் 2050 ம் ஆண்டுக்குள் 1.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் ஆபத்தை எதிர் கொள்வார்கள் என முதல் தேசிய காலநிலை இடர் மதிப்பீட்டு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.

இந்த 72 பக்க அறிக்கையானது பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய வெள்ளம், வறட்சி, சூறாவளி மற்றும் வெப்ப அலைகள் குறித்த சவாலான எதிர்காலத்தை எடுத்துரைத்துள்ளது.

இந்த பருவநிலை மாற்றத்தால் ஆஸ்திரேலியாவின் கடலோர பகுதிகள் பாதிக்கப்படும் என்றும், குறிப்பாக வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் முக்கிய புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அறிக்கை எச்சரித்துள்ளது.

அதே சமயம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் மோசமான நிலைமைகளில் இருந்து எந்தவொரு சமூகமும் தப்பிக்க முடியாது என்றும் அறிக்கை விளக்கியுள்ளது.

இந்த பருவநிலை மாற்றத்தால் $611 பில்லியன் மதிப்புள்ள ஆஸ்திரேலிய சொத்துக்களின் மதிப்புகள் குறைவதோடு குறிப்பிடத்தக்க பொருளாதார இழப்பும் ஏற்படும் என்றும் அறிக்கை எச்சரித்துள்ளது.

அதிகப்படியான வெள்ளம் மற்றும் காட்டுத்தீ காரணமாக ஆஸ்திரேலியாவில் குடிநீர் தரம் மோசமடையும் என்றும் அறிக்கை எச்சரித்துள்ளது.

Latest news

“Furlong” என்ற சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியன் சாலைகளில் நேருக்கு நேர் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு...

சர்வதேச தரகராக அமெரிக்க நீதிமன்றத்தை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியர்

39 வயதான ஆஸ்திரேலியரான பீட்டர் வில்லியம்ஸ், ரஷ்யாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து ரகசியங்களை விற்ற குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகளின்படி, வில்லியம்ஸ் ஒரு அமெரிக்க பாதுகாப்பு...

வெளிநாட்டு மாணவர்களுக்கான படிப்புகளை ரத்து செய்ய கல்வி அமைச்சருக்கு புதிய அதிகாரம்

வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி சேவைகள் (ESOS) சட்டத்தில் திருத்தங்கள் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் திருத்தங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கான படிப்புகளை முற்றிலுமாக ரத்து...

ஒரு குழந்தையை வளர்க்க பெற்றோருக்கு எவ்வளவு செலவாகும்?

ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு செலவிடப்படும் பணத்தின் அளவு, செலவுகள் குறித்து நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் சுமார் $130,000 ஆண்டு வருமானம் கொண்ட...

தினமும் Meta Apps-ஐ பயன்படுத்தும் 3.5 பில்லியன் மக்கள்

உலகெங்கிலும் 3.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு Meta செயலியைப் பயன்படுத்துவதாக Meta தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கூறுகிறார். 2025...

Coles, Woolworths மற்றும் Amazon வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியா முழுவதும் விற்கப்படும் பிரபலமான புரத பார் பிராண்டிற்கு திரும்பப் பெறுதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Muscle Nation தயாரித்த Custard Protein Bar – Cookies and...