Breaking News2050ம் ஆண்டுக்குள் கடலில் மூழ்கும் ஆஸ்திரேலியா

2050ம் ஆண்டுக்குள் கடலில் மூழ்கும் ஆஸ்திரேலியா

-

ஆஸ்திரேலியாவுக்கு காலநிலை தொடர்பான மிகப்பெரிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் பருவநிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் உயர்வதால் எதிர்வரும் 2050 ம் ஆண்டுக்குள் 1.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் ஆபத்தை எதிர் கொள்வார்கள் என முதல் தேசிய காலநிலை இடர் மதிப்பீட்டு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.

இந்த 72 பக்க அறிக்கையானது பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய வெள்ளம், வறட்சி, சூறாவளி மற்றும் வெப்ப அலைகள் குறித்த சவாலான எதிர்காலத்தை எடுத்துரைத்துள்ளது.

இந்த பருவநிலை மாற்றத்தால் ஆஸ்திரேலியாவின் கடலோர பகுதிகள் பாதிக்கப்படும் என்றும், குறிப்பாக வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் முக்கிய புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அறிக்கை எச்சரித்துள்ளது.

அதே சமயம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் மோசமான நிலைமைகளில் இருந்து எந்தவொரு சமூகமும் தப்பிக்க முடியாது என்றும் அறிக்கை விளக்கியுள்ளது.

இந்த பருவநிலை மாற்றத்தால் $611 பில்லியன் மதிப்புள்ள ஆஸ்திரேலிய சொத்துக்களின் மதிப்புகள் குறைவதோடு குறிப்பிடத்தக்க பொருளாதார இழப்பும் ஏற்படும் என்றும் அறிக்கை எச்சரித்துள்ளது.

அதிகப்படியான வெள்ளம் மற்றும் காட்டுத்தீ காரணமாக ஆஸ்திரேலியாவில் குடிநீர் தரம் மோசமடையும் என்றும் அறிக்கை எச்சரித்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...