Breaking News2050ம் ஆண்டுக்குள் கடலில் மூழ்கும் ஆஸ்திரேலியா

2050ம் ஆண்டுக்குள் கடலில் மூழ்கும் ஆஸ்திரேலியா

-

ஆஸ்திரேலியாவுக்கு காலநிலை தொடர்பான மிகப்பெரிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் பருவநிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் உயர்வதால் எதிர்வரும் 2050 ம் ஆண்டுக்குள் 1.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் ஆபத்தை எதிர் கொள்வார்கள் என முதல் தேசிய காலநிலை இடர் மதிப்பீட்டு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.

இந்த 72 பக்க அறிக்கையானது பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய வெள்ளம், வறட்சி, சூறாவளி மற்றும் வெப்ப அலைகள் குறித்த சவாலான எதிர்காலத்தை எடுத்துரைத்துள்ளது.

இந்த பருவநிலை மாற்றத்தால் ஆஸ்திரேலியாவின் கடலோர பகுதிகள் பாதிக்கப்படும் என்றும், குறிப்பாக வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் முக்கிய புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அறிக்கை எச்சரித்துள்ளது.

அதே சமயம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் மோசமான நிலைமைகளில் இருந்து எந்தவொரு சமூகமும் தப்பிக்க முடியாது என்றும் அறிக்கை விளக்கியுள்ளது.

இந்த பருவநிலை மாற்றத்தால் $611 பில்லியன் மதிப்புள்ள ஆஸ்திரேலிய சொத்துக்களின் மதிப்புகள் குறைவதோடு குறிப்பிடத்தக்க பொருளாதார இழப்பும் ஏற்படும் என்றும் அறிக்கை எச்சரித்துள்ளது.

அதிகப்படியான வெள்ளம் மற்றும் காட்டுத்தீ காரணமாக ஆஸ்திரேலியாவில் குடிநீர் தரம் மோசமடையும் என்றும் அறிக்கை எச்சரித்துள்ளது.

Latest news

myGov-ஐ Update செய்தால், 3 நாட்களில் பணம் பெறுவீர்கள்

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு அரசாங்கம் இன்னும் உரிமை கோரப்படாத மருத்துவப் பலன்களை வைத்திருப்பதாக Services Australia வெளிப்படுத்தியுள்ளது. myGov அமைப்பில் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப்...

குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் மறைந்திருக்கும் நெருக்கடிக்கு நீண்டகால தீர்வு தேவை

குழந்தை பராமரிப்பு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான மத்திய அரசின் உத்தரவின் காரணமாக, நாடு முழுவதும் உள்ள குழந்தை பராமரிப்பு சேவைகள் கடுமையான அழுத்தத்தில் உள்ளதாக குழந்தை...

2025 ஆம் ஆண்டில் உலகில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகள்

2025 ஆம் ஆண்டு உலகில் பல்வேறு எழுச்சிகளால் உருவாக்கப்பட்ட ஆண்டாகக் கருதப்படுகிறது. காசா போர் நிறுத்தங்கள், அமெரிக்க அரசியல் வரிகள், பேரழிவு தரும் காட்டுத்தீ மற்றும் போப்பின்...

கலிபோர்னியாவில் கிறிஸ்துமஸ் புயல் – மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சலஸ் பகுதிகளில் கிறிஸ்துமஸ் புயல் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதோடு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் டிசம்பர் 25ஆம் திகதி முதல் 3...

கலிபோர்னியாவில் கிறிஸ்துமஸ் புயல் – மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சலஸ் பகுதிகளில் கிறிஸ்துமஸ் புயல் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதோடு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் டிசம்பர் 25ஆம் திகதி முதல் 3...

ஆஸ்திரேலியாவில் இளைஞர்களை விட பெரியவர்களிடையே இருக்கும் அதிக போதை பழக்கம்

ஆஸ்திரேலியர்களில் வயதானவர்கள் தேசிய சுகாதார வழிகாட்டுதல்களை மீறி மது அருந்துவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய சுகாதாரம் மற்றும் நலன்புரி நிறுவனத்தின் (AIHW) அறிக்கை, 50 மற்றும்...