Breaking News2050ம் ஆண்டுக்குள் கடலில் மூழ்கும் ஆஸ்திரேலியா

2050ம் ஆண்டுக்குள் கடலில் மூழ்கும் ஆஸ்திரேலியா

-

ஆஸ்திரேலியாவுக்கு காலநிலை தொடர்பான மிகப்பெரிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் பருவநிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் உயர்வதால் எதிர்வரும் 2050 ம் ஆண்டுக்குள் 1.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் ஆபத்தை எதிர் கொள்வார்கள் என முதல் தேசிய காலநிலை இடர் மதிப்பீட்டு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.

இந்த 72 பக்க அறிக்கையானது பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய வெள்ளம், வறட்சி, சூறாவளி மற்றும் வெப்ப அலைகள் குறித்த சவாலான எதிர்காலத்தை எடுத்துரைத்துள்ளது.

இந்த பருவநிலை மாற்றத்தால் ஆஸ்திரேலியாவின் கடலோர பகுதிகள் பாதிக்கப்படும் என்றும், குறிப்பாக வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் முக்கிய புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அறிக்கை எச்சரித்துள்ளது.

அதே சமயம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் மோசமான நிலைமைகளில் இருந்து எந்தவொரு சமூகமும் தப்பிக்க முடியாது என்றும் அறிக்கை விளக்கியுள்ளது.

இந்த பருவநிலை மாற்றத்தால் $611 பில்லியன் மதிப்புள்ள ஆஸ்திரேலிய சொத்துக்களின் மதிப்புகள் குறைவதோடு குறிப்பிடத்தக்க பொருளாதார இழப்பும் ஏற்படும் என்றும் அறிக்கை எச்சரித்துள்ளது.

அதிகப்படியான வெள்ளம் மற்றும் காட்டுத்தீ காரணமாக ஆஸ்திரேலியாவில் குடிநீர் தரம் மோசமடையும் என்றும் அறிக்கை எச்சரித்துள்ளது.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...