Newsஅரபு நேட்டோ கூட்டமைப்பை உருவாக்க இஸ்லாமிய நாடுகள் ஒருமித்த முடிவு

அரபு நேட்டோ கூட்டமைப்பை உருவாக்க இஸ்லாமிய நாடுகள் ஒருமித்த முடிவு

-

‘அரபு நேட்டோ கூட்டமைப்பு’ உருவாக்கப்பட வேண்டுமென இஸ்லாமிய நாடுகள் இணைந்து ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

கட்டார் தலைநகர் தோஹாவில் கடந்த 15ம் திகதி அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த ஏறக்குறைய 60 இஸ்லாமிய நாடுகள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எகிப்து அரசால் முன்மொழியப்பட்டுள்ள ‘அரபு நேட்டோ’ என்னும் பெயர், அரபு – முஸ்லிம் நாடுகளின் இராணுவத்தை ஒருங்கிணைத்து ஒரே குழுவாக மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே கடந்த 2015-இல், எகிப்து அரசால் முன்மொழியப்பட்ட இந்த ஒருங்கிணைந்த அரபு நாடுகளின் இராணுவ கூட்டமைப்பு, கடந்த வாரம் கட்டாரில் இஸ்ரேல் அத்துமீறி நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் புத்துணர்ச்சி பெற்றுள்ளது.

இதற்கு பாகிஸ்தான், துருக்கி, ஈராக் உள்ளிட்ட இராணுவ பலம் வாய்ந்த முக்கிய முஸ்லிம் நாடுகள் ஆதரவுக்குரல் கொடுத்துள்ளன.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் ‘அரபு நேட்டோவின்’ தலைமையிடம் செயல்படலாம் என்றும், இப்படைகளுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை அரபு லீக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 22 உறுப்பினர் நாடுகளும் சுழற்சி முறையில் ஏற்றுக்கொள்ளலாம் என்றும் எகிப்து தரப்பிலிருந்து ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...