ஆஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகள் தற்போது குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடை செய்ய முயற்சித்து வருகின்றன.
இந்தக் காரணத்திற்காக, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இளைஞர்கள் குழு ஒன்று, தங்கள் தொலைபேசிகள் இல்லாமல் சமாளிக்க 5 நாள் பரிசோதனையை நடத்த ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
அதன்படி, ஐந்து நாட்களுக்கு அவர்களின் படுக்கையறைகளில் இருந்து அனைத்து தொழில்நுட்ப சாதனங்களும் அகற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பள்ளி முடிந்ததும் பெற்றோருடன் நேரத்தை செலவிடவில்லை என்றும், YouTube வீடியோக்களைப் பார்க்கவும் நண்பர்களுடன் அரட்டையடிக்கவும் “மூன்று அல்லது நான்கு மணி நேரம்” படுக்கையறையைப் பயன்படுத்தியதாகவும் குழந்தைகள் குறிப்பிடுகின்றனர்.
இது ஒரு Radio 5 Live மற்றும் BBC Bitsize ஆய்வுத் திட்டமாகும். இது இந்த ஆண்டு இளைஞர் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாகும்.
பல டீனேஜர்கள் இன்னும் தொலைபேசிகள், டேப்லெட்டுகள் மற்றும் மடிக்கணினிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்த ஆசைப்படுகிறார்கள், ஆனால் இந்த திட்டத்தில் பங்கேற்ற 15 வயது மிச்செல், தனது தொலைபேசி மற்றும் மடிக்கணினியைப் பார்ப்பதற்குப் பதிலாக “தூங்கச் செல்ல ஒரு புத்தகத்தைப் படிக்க” திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறார்.
இந்த மாற்றங்கள் வரவேற்கத்தக்கவை என்றும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு “தொலைபேசி இல்லாத நேரத்தை அறிமுகப்படுத்துதல் அல்லது படுக்கைக்கு முன் தொலைபேசியை அணைத்தல்” மூலம் வரம்புகளை நிர்ணயிக்க வேண்டும் என்றும் குழந்தைகள் ஆணையர் டேம் ரேச்சல் டி சௌசா கூறுகிறார்.
BBC நடத்திய 13 முதல் 18 வயதுக்குட்பட்ட 2,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆன்லைன் கணக்கெடுப்பில், விளையாட்டாளர்களாக அடையாளம் காணும் இளைஞர்களில் 38% பேர் வாரத்திற்கு ஏழு மணிநேரம் அல்லது அதற்கு மேல் தங்கள் படுக்கையறைகளில் கேமிங்கில் செலவிடுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
10 சிறுவர்களில் ஒருவர் வாரத்திற்கு 20 மணி நேரத்திற்கும் மேலாக தங்கள் குடும்பத்தினரை விட்டு விலகி தங்கள் அறையில் செலவிடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.