Newsகாஸாவில் 65,000-இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு - வீதிகளில் சிதறிக்கிடக்கும் உடல்கள்

காஸாவில் 65,000-இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு – வீதிகளில் சிதறிக்கிடக்கும் உடல்கள்

-

2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காசா – இஸ்ரேல் போர் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் காசாவுக்கு எதிராக தரைவழி தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல் இராணுவம் மேலும் பல பகுதிகளுக்கு தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளது.

அதன்படி, இஸ்ரேலிய தாக்குதல்களில் நேற்று மட்டுமே 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக இஸ்ரேலிய விமானப்படை மற்றும் பீரங்கிப் படை சுமார் 150 இற்கும் அதிகமான தடவைகள் காசா நகரை தாக்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இத் தாக்குதல்கள் பலஸ்தீனியர்களின் கூடார முகாம்கள், உயரமான கட்டிடங்கள் என அனைத்தையும் தரைமட்டமாக்கியது.

அதுமட்டுமின்றி சுமார் 90% மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதோடு பல வைத்தியசாலைகளும் சேதமடைந்துள்ளன.

காசா நகரிலிருந்து மக்கள் வெளியேறுவதற்காக புதிய வழித்தடத்தையும் இஸ்ரேல் திறந்துள்ளது. இந்த பாதை மூலம் காசா மக்கள் வெளியேறி வருகின்றனர்.

வான், கடல், தரை என இஸ்ரேலின் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எல்லா இடங்களிலும் சிதறிக் கிடப்பதாகவும் இரண்டு வருடப் போரில் தாங்கள் எதிர்கொண்ட மிகக் கடுமையான குண்டுவீச்சுகள் இவையெனவும் காசா மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காசாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்துமாறு சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருவதோடு, இஸ்ரேலின் இந்த தரைவழித் தாக்குதல்களை வன்மையாகவும் கண்டித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேல் இனப் படுகொலை செய்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

Latest news

பிரான்ஸ் Louvre கொள்ளை தொடர்பாக ஐந்து புதிய சந்தேக நபர்கள் கைது

இந்த மாதம் லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடந்த நகை திருட்டு தொடர்பாக பிரெஞ்சு போலீசார் ஐந்து நபர்களை கைது செய்துள்ளனர். அதில் ஒரு முக்கிய சந்தேக நபரும்...

WA நகரில் சந்தேகத்திற்கிடமாக இறந்து கிடந்த குழந்தை!

மேற்கு ஆஸ்திரேலிய நகரத்தில் ஒரு குழந்தையின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பெர்த்திலிருந்து சுமார் 40 கி.மீ தெற்கே உள்ள பால்டிவிஸில் உள்ள ஒரு...

அமெரிக்காவில் அணு ஆயுத சோதனைக்கு உத்தரவு பிறப்பித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அணு ஆயுதங்களை பரிசோதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்கு சற்று முன்பு, அமெரிக்க அதிபர்...

“Furlong” என்ற சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியன் சாலைகளில் நேருக்கு நேர் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு...

“Furlong” என்ற சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியன் சாலைகளில் நேருக்கு நேர் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு...

சர்வதேச தரகராக அமெரிக்க நீதிமன்றத்தை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியர்

39 வயதான ஆஸ்திரேலியரான பீட்டர் வில்லியம்ஸ், ரஷ்யாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து ரகசியங்களை விற்ற குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகளின்படி, வில்லியம்ஸ் ஒரு அமெரிக்க பாதுகாப்பு...