Newsவிசா கட்டணங்களை இரத்து செய்யும் முயற்சியில் பிரித்தானியா

விசா கட்டணங்களை இரத்து செய்யும் முயற்சியில் பிரித்தானியா

-

திறமையானவர்களுக்கான விசா கட்டணங்களை இரத்து செய்வது குறித்து பிரித்தானிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா குடியேற்றவிசா குறித்து கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் இது தொடர்பில் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உலகின் சிறந்த விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் டிஜிட்டல் நிபுணர்களை பிரித்தானியாவுக்குள் ஈர்ப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக மேற்படி திட்டத்தை பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய உலகின் முதல் ஐந்து பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் அல்லது மதிப்புமிக்க பரிசுகளை வென்றவர்களுக்கான விசா செலவுகளை பூஜ்ஜியமாகக் குறைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக ட்ரம்ப் நிர்வாகமானது H-1B விசாதாரர்களுக்கான கட்டணத்தை 1 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்தியது. இதனால் அங்கு கல்வி கற்று தொழிலை பெறலாம் என எதிர்பார்த்திருந்த வெளிநாட்டு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

ஆகவே தற்போது பிரித்தானிய முன்னெடுக்கும் இந்த திட்டம் கைகொடுத்தால் அமெரிக்கா செல்ல நினைத்த மாணவர், தொழிலாளர் குழுக்கள் பிரித்தானியாவிற்கு செல்வதற்கு வாய்ப்புள்ளது. இது பிரித்தானியாவின் பொருளாதாரத்தையும் கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

மெல்பேர்ணில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹனுக்கா அடையாளத்துடன் கூடிய கார்

மெல்பேர்ண், St Kilda East-இல் "Happy Chanukah" என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்த காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை...