Newsதனி நாடாக அங்கீகரிக்கப்பட்ட பலஸ்தீனம்

தனி நாடாக அங்கீகரிக்கப்பட்ட பலஸ்தீனம்

-

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா அரசுகள் அறிவித்துள்ளன.

இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் செப்டெம்பர் 21 வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஞாயிற்றுக்கிழமை (செப்டெம்பர் 21) முதல் ‘சுதந்திர நாடாக பலஸ்தீனம்’ என்பதை ஆஸ்திரேலியா அங்கீகரிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே கருத்தை பிரிட்டன் மற்றும் கனடாவின் பிரதமர்களும் வெளிப்படுத்தி பலஸ்தீன மக்களுக்கான தங்களது ஒருமித்த ஆதரவை மீண்டுமொருமுறை உரைத்துள்ளனர்.

ஜி7 கூட்டமைப்பிலிருந்து முதல் நாடாக, பலஸ்தீனத்தை தனி நாடாக கனடா அங்கீகரித்திருப்பதும் சர்வதேச அரசியலில் உற்றுநோக்கப்படுகிறது.

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில் இஸ்ரேல் இராணுவம் மிகத் தீவிரமாக தாக்குதல் மற்றும் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. எனவே, அங்கிருந்து மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறவேண்டும் என்று இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், காஸாவில் அமைதி நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்ய முக்கிய நகர்வாக பாலஸ்தீனம் சர்வதேச சமூகத்தால் தனி நாடாக அங்கீகரிக்கப்படுவதன் மூலம் இஸ்ரேலுக்கு நெருக்கடியளித்து காஸா போரில் விரைவில் தீர்வு எட்ட வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...