NewsPUBG-யால் விபரீதம் - தாய், சகோதரர்களை சுட்டுக்கொன்ற சிறுவன்

PUBG-யால் விபரீதம் – தாய், சகோதரர்களை சுட்டுக்கொன்ற சிறுவன்

-

பாகிஸ்தானின் லாகூரின் கஹ்னா பகுதியைச் சேர்ந்த ஜைன் அலி எனும் 17 வயது சிறுவனுக்கு 100 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Online PUBG விளையாட்டில் ஏற்பட்ட தாக்கத்தின் உச்சத்தில் தாயார் மற்றும் மூன்று சகோதரர்களை சுட்டுக்கொன்ற வழக்கிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு இச்சம்பவம் நடந்துள்ளது. அப்போது சிறுவனுக்கு 14 வயது ஆகும்.

குறித்த சிறுவன் PUBG விளையாட்டில் அடிமையாகயிருந்ததாகவும், இதனை தாய் கண்டித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் PUBG-இல் தனக்கான இலக்குகளை அடையமுடியாத சந்தர்ப்பங்களில் சிறுவன் ஆக்ரோஷமடைவதை வழக்கமாகவும் கொண்டுள்ளார்.

கொலை நடந்த அன்று, பல மணித்தியாலங்களாக PUBG விளையாடிய சிறுவன், ஒரு இலக்கை தவறவிட்டதால் ஆத்திரமடைந்துள்ளார்.

அதேநேரம் சிறுவன் அதிக நேரம் விளையாட்டில் மூழ்கியிருப்பதாக அவனது தாய் கண்டிக்கவே சிறுவனுக்கு மேலும் எரிச்சல் அதிகரித்தது.

இதனால் சிறுவனின் தாயார் நாகித் முபாரக், அண்ணன் தைமூர், இரண்டு சகோதரிகள், மஹ்னூர் மற்றும் ஜன்னத் ஆகியோர் உறங்கிக்கொண்டிருந்த சமயத்தில் வீட்டிலிருந்த கைத் துப்பாக்கியை எடுத்து சிறுவன் ஜைன் அலி அவர்களை சுட்டுக் கொன்றுள்ளான்.

விளையாட்டின் தீவிர தாக்கத்தால் இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இவ்வழக்கை விசாரித்த லாகூர் நீதிமன்றம் நேற்று இத் தீர்ப்பை வழங்கியது.

குறித்த சிறுவனின் வயதை அடிப்படையாகக் கொண்டு, மரண தண்டனைக்குப் பதிலாக நான்கு வருடங்கள் ஆயுள் தண்டனை அதாவது, ஒரு கொலைக்கு 25 வருடங்கள் என மொத்தம் 100 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, 4 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Latest news

போர் நிறுத்தத்தை மீறி காஸாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்றுகொண்ட நிலையில் கடந்த வாரம்...

ஆஸ்திரேலிய குதிரைகளுக்கான எட்டு ஆண்டு சாதனையை முறியடித்தது Ka Ying Rising

உலகின் மிகவும் மதிப்புமிக்க குதிரைப் பந்தயமான The Everest-ஐ, ஹாங்காங்கை தளமாகக் கொண்ட பிரபல ஜெல்டிங் வீரர் கா யிங் "Ka Ying Rising" வென்றுள்ளார். Royal...

குயின்ஸ்லாந்தில் Takeaway Order-களில் கலந்துள்ள எலி விஷம்

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பல்வேறு மருத்துவமனைகளில் ஐந்து பேர் உடல்நிலை சரியில்லாமல் வந்ததை அடுத்து, பல Takeaway Orderகளில் எலி விஷம் கலந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் Logan...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....

மெல்பேர்ணில் மூன்று ஆளில்லாத வீடுகளில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள்

மெல்பேர்ண் முழுவதும் ஆளில்லாத மூன்று தனித்தனி வீடுகளில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. நேற்று அதிகாலை 5 மணிக்கு முன்னதாக வீடுகள்...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....