NewsPUBG-யால் விபரீதம் - தாய், சகோதரர்களை சுட்டுக்கொன்ற சிறுவன்

PUBG-யால் விபரீதம் – தாய், சகோதரர்களை சுட்டுக்கொன்ற சிறுவன்

-

பாகிஸ்தானின் லாகூரின் கஹ்னா பகுதியைச் சேர்ந்த ஜைன் அலி எனும் 17 வயது சிறுவனுக்கு 100 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Online PUBG விளையாட்டில் ஏற்பட்ட தாக்கத்தின் உச்சத்தில் தாயார் மற்றும் மூன்று சகோதரர்களை சுட்டுக்கொன்ற வழக்கிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு இச்சம்பவம் நடந்துள்ளது. அப்போது சிறுவனுக்கு 14 வயது ஆகும்.

குறித்த சிறுவன் PUBG விளையாட்டில் அடிமையாகயிருந்ததாகவும், இதனை தாய் கண்டித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் PUBG-இல் தனக்கான இலக்குகளை அடையமுடியாத சந்தர்ப்பங்களில் சிறுவன் ஆக்ரோஷமடைவதை வழக்கமாகவும் கொண்டுள்ளார்.

கொலை நடந்த அன்று, பல மணித்தியாலங்களாக PUBG விளையாடிய சிறுவன், ஒரு இலக்கை தவறவிட்டதால் ஆத்திரமடைந்துள்ளார்.

அதேநேரம் சிறுவன் அதிக நேரம் விளையாட்டில் மூழ்கியிருப்பதாக அவனது தாய் கண்டிக்கவே சிறுவனுக்கு மேலும் எரிச்சல் அதிகரித்தது.

இதனால் சிறுவனின் தாயார் நாகித் முபாரக், அண்ணன் தைமூர், இரண்டு சகோதரிகள், மஹ்னூர் மற்றும் ஜன்னத் ஆகியோர் உறங்கிக்கொண்டிருந்த சமயத்தில் வீட்டிலிருந்த கைத் துப்பாக்கியை எடுத்து சிறுவன் ஜைன் அலி அவர்களை சுட்டுக் கொன்றுள்ளான்.

விளையாட்டின் தீவிர தாக்கத்தால் இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இவ்வழக்கை விசாரித்த லாகூர் நீதிமன்றம் நேற்று இத் தீர்ப்பை வழங்கியது.

குறித்த சிறுவனின் வயதை அடிப்படையாகக் கொண்டு, மரண தண்டனைக்குப் பதிலாக நான்கு வருடங்கள் ஆயுள் தண்டனை அதாவது, ஒரு கொலைக்கு 25 வருடங்கள் என மொத்தம் 100 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, 4 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

மெல்பேர்ணில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹனுக்கா அடையாளத்துடன் கூடிய கார்

மெல்பேர்ண், St Kilda East-இல் "Happy Chanukah" என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்த காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை...