Newsத.வெ.க மாநாடு - கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 36 பேர்...

த.வெ.க மாநாடு – கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 36 பேர் பலி

-

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று (27) இரவு கரூர் மாவட்டத்தில் மக்களைச் சந்தித்து உரையாற்றிய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

​கரூர் மாவட்டத்தில் தனது கட்சியின் தலைவர் என்ற முறையில் மக்களைச் சந்திக்க வந்த விஜய்யின் வேனைச் சுற்றி லட்சக்கணக்கானோர் திரண்டனர்.

விஜய் பேசத் தொடங்கியபோது, கட்டுக்கடங்காத கூட்டம் வேனுக்கு மிக அருகில் கூடியதால், கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது.

​அப்போது, விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே, கூட்டத்தில் இருந்த ஒரு பெண் மயக்கமடைந்தார். உடனடியாக அவர் அம்புயூலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.​

​விஜய் தனது உரையை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லத் தொடங்கியது. அப்போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்தனர்.

இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.​

​உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவர் என்ற தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோடு, உயிரிழந்தவர்களின் விபரங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.​

விஜய்யின் பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Latest news

$4,500 மதிப்புள்ள புற்றுநோய் மருந்தை $35க்கு வழங்கத் தயாராகும் ஆஸ்திரேலிய அரசாங்கம் 

மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்தான டுகாடினிப்பை, எதிர்காலத்தில் மருந்து நன்மைகள் திட்டத்தில் (PBS) சேர்க்க மத்திய அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இது செயல்படுத்தப்பட்டால்,...

“போராட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன” – NSW பிரதமர் கடுமையான விதிகள்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் ஒரு வார ஆண்டு நிறைவையொட்டி போராட்டங்களைத் திட்டமிடும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ்...

Bondi நினைவேந்தல் – கட்டிடங்களின் உச்சியில் துப்பாக்கி சுடும் வீரர்கள்

ஆஸ்திரேலியாவில் Bondi நினைவேந்தல் நிகழ்வை கண்காணிக்க, காவல்துறையினர் துப்பாக்கிகளுடன் கட்டிடங்களின் உச்சியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.  15 உயிர்களை பலி வாங்கிய போண்டி துயர சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம்...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

பிரபலமான கோல்ட் கோஸ்ட் பூங்காவில் பெண் ஒருவர் மீது தாக்குதல்

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணியளவில் பர்லீ ஹெட்ஸ் தேசிய பூங்காவில் நடந்து சென்று கொண்டிருந்த 38 வயது பெண் ஒருவர், அடையாளம் தெரியாத ஒருவரால்...