Newsஆஸ்திரேலியாவில் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர் - ஊடகத்திற்கு $150,000 அபராதம்

ஆஸ்திரேலியாவில் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர் – ஊடகத்திற்கு $150,000 அபராதம்

-

ஊழியரை நியாயமற்ற முறையில் பணி நீக்கம் செய்ததற்காக ஆஸ்திரேலிய பொது ஒளிபரப்பு ஊடகத்திற்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

வானொலி தொகுப்பாளரை நியாமற்ற முறையில் பணி நீக்கம் செய்த ஆஸ்திரேலியாவின் தேசிய ஒளிபரப்பு ஊடகமான Australian Broadcasting Corporation (ABC) நிறுவனத்திற்கு நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

Antoinette Latouf என்ற பெண் வானொலி தொகுப்பாளர் 2023ம் ஆண்டு டிசம்பரில் காசா போர் குறித்து அவரது சமூக ஊடக பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இதை எதிர்த்து Antoinette Latouf வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில் பெடரல் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனமான ABC-க்கு சுமார் $150,000 அபராதம் விதித்துள்ளது.

Antoinette Latouf-இற்கு ஏற்கனவே A$70,000 இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், இந்த அபராதம் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது.

ஊடக நிறுவனமான ABC தனது செயலின் தீவிரத் தன்மையை உணர்ந்து கொள்ள இந்த கூடுதல் அபராதம் அவசியம் என்று வழக்கை விசாரித்த நீதிபதி டாரில் ரங்கையா தெரிவித்துள்ளார்.

Latest news

விக்டோரியர்களுக்கு வசதியான சுகாதார சேவைகளுக்கான திட்டங்கள்

விக்டோரியா மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்காக, Community Health First  அரசாங்கத்திற்கு $75 மில்லியன் முதலீட்டை முன்மொழிந்துள்ளது . பொதுமக்களுக்கு மலிவு விலையில் அதிக மதிப்பு...

Work From Home-ஐ சட்டப்பூர்வமாக்க விக்டோரியன் அரசு தயார்

விக்டோரியா மாநில அரசு புதிய சட்டத்தின் மூலம் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதை சட்டப்பூர்வமாக்க தயாராகி வருவதாக பிரதமர் ஜெசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார் . அதன்படி, விக்டோரியாவில்...

லொஸ் ஏஞ்சல்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்து

அமெரிக்காவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான கலிபோர்னியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள செவ்ரான் எல் செகுண்டோ சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியா ஆளுநரின்...

மெல்பேர்ணில் நீரில் மூழ்கக்கூடிய பகுதிகளைக் காட்டும் புதிய வரைபடம்

மெல்பேர்ணின் உள் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள், வெள்ளப் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர். மெல்பேர்ண் வாட்டர் இன்று வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட வெள்ள வரைபடம், நூறு...

வெளிநாட்டு தலையீடு இல்லாமல் நாட்டைப் பாதுகாப்போம் – அரசாங்கம்

ஆஸ்திரேலியாவை பாதுகாப்பான நாடாக மாற்றுவதற்கு உள்துறை அமைச்சகம் செயல்பட்டு வருவதாகக் கூறுகிறது. நமது நாட்டின் இறையாண்மை, ஜனநாயகம் மற்றும் தேசிய நலன்களுக்கு வெளிநாட்டு தலையீட்டால் ஏற்படும் அச்சுறுத்தல்கள்...

ஆஸ்திரேலியாவைத் தாக்க இருக்கும் புயல்களுக்கான கவர்ச்சிகரமான பெயர் பட்டியல்

ஆஸ்திரேலியாவின் அடுத்த வெப்பமண்டல புயல்களுக்கான புதிய பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நவம்பர் முதல் ஏப்ரல் இறுதி வரை நீடிக்கும் புயல் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக...